பக்கம் எண் :

130பாரதம்ஆரணிய பருவம்

டும்-இறந்தது தழுவியஎச்சப்பொருளன.  சேண் - வானம் 'தூய்நீர்'
எனவும் பாடம்.  வி-வடசொல், பறவைப் பொதுப் பெயர்: இது இங்கே,
சிறப்பாய் வண்டு என்னும் ஒருசாதிப் பறவையைக் குறித்தது.  அகமென்னும்
உள்ளிடப் பெயர், அங்கு இருக்கின்ற மனத்திற்கு ஆதலால்
இடவாகுபெயர்.                                            (179)

4.ஆயிரங்கதிருந்திங்க ளனந்தமுமடங்கமேல்மேல்
காய்கதிர்விரிவதியார்க்குங் கருத்துறக்காணவொண்ணாச்
சேயொளிதவழ்வதாகித் திசைமுகன்றனக்குநல்கும்
மாயிருங்கிரணரத்ந மவுலியுங்கவித்தானன்றே.

     (இ-ள்.)ஆயிரம் கதிர்உம் - அநேகசூரியர்களும், திங்கள்
அனந்தம்உம் - அநேகசந்திரர்களும், அடங்க - ஒளிகுறையும்படி, மேல்
மேல் காய் கதிர்விரிவது - மிகவும் அதிகமாக விளங்குகின்ற கிரணங்கள்
வீசுவதும், யார்க்குஉம்-எவருக்கும், கருத்து உற - மனம்பொருந்த காண
ஒண்ணா- பார்த்தற்கு முடியாத, சேய்ஒளி-நெடுந்தூரத்துஞ் சென்று
விளங்குகின்ற பிரகாசம், தவழ்வது-தங்குவதும், ஆகி-ஆய், திசைமுகன்
தனக்கு நல்கும்-நான்கு முகங்களையுடையபிரமதேவனால்தனக்கு (முன்
ஒருகாலத்தில்) சூட்டப்பட்ட, மா இரு கிரணம் ரத்நம் மவுலிஉம்-மி
அதிகமான ஒளியையுடைய நவரத்தினங்களையும்பதித்துச் செய்யப்பட்ட
கிரீடத்தையும், கவித்தான் - (அருச்சுனனுக்கு இந்திரன்) சூட்டினான்;(எ-று.)
அன்றே - ஈற்றசை.

     முச்சுடர்களுள்மற்றையிருசுடர்களாகிய சந்திர
அக்கினியர்களைப்போலப்பதினாறுஏழு கிரணங்களையுடைத்தாகாமே
ஆயிரங் கிரணங்களையுடைத்தாய்அக்கிரணங்களுட் சிலவற்றை அவ்விரு
சுடருக்குங் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி, 'கதிர்'என்று சூரியனுக்குப்
பெயர். ஆயிரம் என்றது.  மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று
எடுத்துக்காட்டியவாறு.  ஆயிரங்கதிர், திங்களனந்தம் என்பன -
இல்பொருள்கள். இனி, ஆயிரங்கதிர்-ஸஹஸ்ரகிரணனாகியசூரியனுக்குப்
பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாகவுமாம்.
ந+அந்தம்=அநந்தம்;அளவிறந்தன என்றுபொருள்.  உம்மைகள்,
எண்ணுப்பொருளன.  விரிவதி யார்க்கும் - குற்றியலிகரம்.
காணவொண்ணாமைக்குக்காரணம், மிகுந்த பிரகாசத்தாற் கண்களுக்குக்
கூச்சந்தருதல்.  சேயொளி - சேய்மையென்னும் பண்புப்பெயர்,
ஈறுபோயிற்று;இனி செம்மையென்பது ஈறுபோய் ஆதிநீண்டு முன்நின்ற
மெய் திரிந்ததாகக் கொண்டு, சிவந்த ஒளி யென்றலும் ஒன்று.  திசைமுகன்
- நான்கு திக்கையும் நோக்கும் நான்கு முகமுள்ளவன். ரத்நம் - வடமொழி
விகாரப்படாமே நின்றது.  மா + இரு=மாயிரு;ஒருபொருட்பன்மொழி;
உரிச்சொற் புணர்ச்சி.  இரு - பண்படி.  'மவுலியும்'என்ற உம்மை,
கீழிற்கவியை நோக்கிவந்த இறந்தது தழுவிய எச்சப் பொருளது;
உயர்வுசிறப்பாகவுமாம்.  மவுலி = மௌலி: முதற்போலி;தலையின்
பெயராகிய இது, இடவாகுபெயராய், அதில் அணி