பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்131

யுங் கிரீடத்தைஉணர்த்திற்று.  இக்கிரீடத்தை அணிந்ததுபற்றியே
அருச்சுனனுக்குக் கிரீடீயென்று ஒருபெயர் நிகழ்ந்தது;அனந்தமும் மடங்க
என்றும் பதம் பிரிக்கலாம்.                                 (180)     

5.-அருச்சுனனுக்குத்தேவேந்திரன் சிறப்புச்செய்தல்.

ஆடையுங்கலனுந்தெவ்வை யடுந்திறற்படையுநல்கி
ஏடவிழலங்கலானோராசனத்திருத்தியென்றும்
தேடுதற்கரியதூய வமுதுசெம்பொற்கலத்தில்
கூடவுண்டமரர்க்கெல்லாங் குரிசிலாஞ்சிறப்புஞ்செய்தான்.

     (இ-ள்.) ஏடுஅவிழ் அலங்கலான் - பூவிதழ்கள் மலர்கின்ற
மாலையையுடையஇந்திரன்,-ஆடைஉம்-வஸ்திரங்களையும்,கலன்உம் -
ஆபரணங்களையும்,தெவ்வை அடும் திறல் படைஉம் - பகைவரைக்
கொல்லவல்ல வலிமையையுடைய ஆயுதங்களையும்,நல்கி-
(அருச்சுனனுக்குக்) கொடுத்து,-ஓர்ஆசனத்து இருத்தி - (தான்)
இருக்கின்றதொரு ஆசனத்தில் தானே (அவனையுங்கூட) இருக்க வைத்து,
என்றுஉம் தேடுதற்கு அரிய தூய அமுது - எந்நாளுந் தேடியடைதற்கு
அருமையான பரிசுத்தமான அமிருதத்தை, செம்பொன் கலத்தில் - சிவந்த
பொன்னினாலாகியபாத்திரத்திலே, கூட உண்டு - அவனுடனே ஒக்க
இருந்து நுகர்ந்து, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்புஉம் செய்தான் -
தேவர்களெல்லோருக்கும் அரசனாகின்றசிறப்பையும் (அருச்சுனனுக்குச்)
செய்து வைத்தான்;(எ-று).

     தேவேந்திரன்தன்குமாரனானஅருச்சுனனுக்குத் தன்னாசனத்தில்
அருத்தாசனங் கொடுத்து அவனைக்கூடவைத்துக்கொண்டு அமிருதபானம்
பண்ணி அவனையும்அமுதுசெய்வித்து அவனைத்தேவர்களுக்கு
இளவரசாக்கினானென்பதுகருத்து.  இனி, அமரர்க் கெல்லாங்குரிசில்-
தேவேந்திரன், ஏடவி ழலங்கலான்-அருச்சுனனை,ஓராசனத்திருத்தி-
வேறொருஆசனத்தில் இருக்கவைத்து, அமுது கூட உண்டு -
அமிருதம்போல மிக வினிய உணவை அவனோடுபுசித்து, ஆம் சிறப்பும்
செய்தான்-தக்க சன்மானத்தையுஞ் செய்தான் என உரைப்பாருமுளர்.  கலன்
- கலம்: மகரனகரம் மாறி வருஞ்சொல்: இங்கே, கலன் - அணிகலன்.
'மந்த்ரத்துடனடற்படையுநல்கி'என்ற பாடத்துக்கு - அஸ்திரம் சஸ்திரம்
என்னும் இருவகை ஆயுதங்களையும்அளித்தமை கூறினாரென்க: இன்னும்
இதிலே எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன என்னும் பலவகைப்
படைகளும் அடங்கும்.  (அஸ்திரம்- மந்திரத்துடனே பிரயோகிக்கப்படுகின்ற
ஆயுதமென்றும், சஸ்திரம்-மந்திரமின்றிக்கேவிடப்படுகின்ற ஆயுத மென்றும்
வேறுபாடு அறிக; அத்திரம் - கைவிடு படை, சத்திரம் - கைவிடாப்படை
எனவும் வேறுபாடு கூறுவர்) கலம் - உண்கலம்.  குரிசில் - பெருமையிற்
சிறந்தவன்;ஆண்பாற் சிறப்புப்பெயர்:[நன்- பெயர் 69.]       
(181)