கொடுத்தஅவ்வாசிரியர்கள் பெறும்படி, கொடுக்கும் - (அவர்களுக்குக்) கொடுக்கவேண்டிய, செல்வம்-குருதட்சிணையாகியதொருபொருள், உண்டு உள்ளது',என்று-,பெரியோர்-(அறிவிற்)பெரியவர்கள், சொல்வர்-; 'கொற்றவ-வெற்றியையுடையவனே!உனக்கு-நானும்-,கூறும் நல் குருஏ ஆகும் - (வில்வித்தையை) உபதேசித்த நல்ல ஆசிரியனேயாவேன்: (ஆனதுபற்றி), உற்ற ஆறு - பொருந்திய முறைமைப்படியே, எனக்கு-, நீயும்-,ஒரு வரம் தருக- (யான்) வேண்டுவதொருவரத்தைக் கொடுக்கக்கடவை,'என்றான்- என்று (இந்திரன்) கூறினான்;(எ-று.) கீழ்ஐந்தாங்கவியில் 'அடற்படைநல்கி'என்றதனால்,இந்திரன் அருச்சுனனுக்குக் குருவாயினான். குரு என்னும் வடசொல்லுக்கு - (அஜ்ஞாநமாகிய மனத்தின்) இருளைப்போக்குபவனென்றுபொருள்: கு - இருள், ரு - ஒழிப்பவன். கல்விக்குக் குற்றமாவது - ஐயந்திரிபுகள்; ஐயமாவது-இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என்று பலபடக்கருதும் சந்தேகம்: திரிபாவது - ஒன்றன்பொருளைவேறொன்றாகத்துணியும் விபரீதம். (188) 13.-தேவர்கட்குமானுடர் செய்வதொன்றில்லையாயினும் மனத்திலுள்ளதைக்கூறுக என்று அருச்சுனன் வினாவல். தந்தைசொன்மகிழ்ந்துகேட்டுத் தனுவினுக்கொருவனான மைந்தனுந்தேவர்க்கைய மானுடர்செய்வதுண்டோ சிந்தையினிகழ்ந்ததொன்று செப்புகென்றவனுஞ்செப்ப இந்திரன்றானுமீண்டுமின்னனபகரலுற்றான். |
(இ-ள்.)தந்தை சொல் - பிதாவாகிய இந்திரனுடைய வார்த்தையை, தனுவினுக்கு ஒருவன் ஆன மைந்தன்உம் - வில் வித்தையில் ஒப்பற்றவனானகுமாரனாகியஅருச்சுனனும், கேட்டு-, மகிழ்ந்து-,'ஐய- தந்தையே! தேவர்க்கு மானுடர் செய்வது உண்டுஓ - (மனிதர்களுக்குத் தேவர்கள் வரங்கொடுப்பது மரபேயன்றித்) தேவர்களுக்கு மனிதர்கள் செய்யக்கடவதொரு உதவி உள்ளதோ? [இல்லையன்றோ](ஆயினும்), சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக-(உன்) மனத்திற் கருதிய ஒரு காரியத்தைச்சொல்லுவாயாக',என்று-,அவன்உம் - அவ்வருச்சுனனும், செப்ப - சொல்ல,-இந்திரன்தான்உம்- இந்திரனும், மீண்டுஉம் - மறுபடியும், இன்னன - இவ்வார்த்தைகளை,பகரல் உற்றான்- சொல்லத் தொடங்கினான்;(எ-று.)-அவற்றைமேல் மூன்றுகவிகளாற் கூறுகின்றார். தனுவினுக்கு -உருபுமயக்கம். செப்புகஎன்னும் வியங்கோள் வினைமுற்றின்ஈற்றுஅகரம் தொக்கது: வியங்கோளுக்கு இவ்விகாரம் பெரும்பாலுஞ் செய்யுட்களில் வரும். (189) |