பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்167

     (இ-ள்.) என்னா- என்று, அசுர ஈசர் - அசுரத்தலைவர்கள்,
இசைத்தலும் - சொன்னவளவிலே,-மன்ஆகவம் வீரன்உம் - நிலைபெற்ற
போரில்வல்ல அருச்சுனனும், வார் சிலைநாண்-நீண்ட வில்லின் நாணி, தன்
ஆகம் உற தழுவ-தனது மார்பை நன்றாகப்பொருந்தும்படி, (அதனைமிக்கு
இழுத்து), தழல் வாய் மின் ஆர் கணைதூவி - நெருப்புப்போற் கொடிய
நுனியையுடைய (ஒளியால்) மின்னல்போன்ற அம்புகளை(அவர்கள்மீது)
சொரிந்து, வெகுண்டனன் - கோபித்தான்;(எ-று.)

     அசுரர்கள்போலவார்த்தையாலன்றிச் செய்கையினால்தனது
கோபத்தை வெளிக்காட்டினானென்பார், 'கணைதூவி வெகுண்டனன்'
என்றார்:இனி, வெகுண்டு கணைதூவினன் என விகுதி பிரித்துக்
கூட்டுவாரு முளர்.                                  (237)

62.பொய்த்தானவர்போ ரரியன்னவன்மேல்
மொய்த்தார்முகில்செங் கதிர்மூடுவபோல்
வைத்தாரைவடிக் கணைவாண்மழுவேல்
உய்த்தார்வரைமே லுருமேறெனவே.

     (இ-ள்.)முகில் - மேகங்கள், செம் கதிர்-சிவந்த கிரணங்களையுடைய
சூரியனை,மூடுவ போல் - மறைப்பனபோல,  பொய்தானவர்-
வஞ்சனையையுடையஅசுரர்கள், போர் அரி அன்னவன மேல் - யுத்தத்திற்
சிங்கத்தையொத்த அருச்சுனன்மேலே, மொய்த்தார்-நெருங்கி, வை தாரை
வடி கணை-கூர்மையானநுனியையுடைய நெருப்பிற்
காய்ச்சியடிக்கப்படுதலையுடையஅம்புகளையும்,வாள்-வாட்களையும்,மழு-
மழுக்களையும்,வேல்-வேல்களையும்,வரை மேல் உரும்ஏறு என-
மயைின்மேல்விழுகின்ற பேரிடிகளைப்போல,உய்த்தார்-செலுத்தினார்கள்;
(எ-று.)

    பொய்த்தானவர் என்பதற்கு-(இனி விரைவில் அழிதலினாற்)
பொய்யாகும் அசுர ரென்றுமாம். முகில் செங்கதிர் மூடுதல், விரைவில்
மூட்டம் வாங்குமென்று தெரிவித்தற்கு வந்த உவமை. வை-உரிச்சொல்: ஏறு
- ஆண்பெயர்;பெரியதை ஆணென்றல், ஒருமரபு:'ஆணலை'என்பதுங்
காண்க.  அரியன்னவன் - யானைமுதலிய பெருவிலங்குகளையும்
அழிக்கவல்ல மிருகேந்திரனாகியசிங்கம்போலப் பெரும்பகைவர்களையும்
அழிக்கவல்ல பெருவீரன்;
இனி,பகையொடுக்குவதில் திருமால்
போன்றவனென்றுமாம்.  உருமுற்றெனவே என்று பிரதிபேதம்.  (238)

63.என்முன்னவனென் முனெனாவெவரும்
முன்முன்வரமுந் தமுருக்கினனால்
தன்முன்னொருவீரர்தராதலமேல்
வின்முன்னினிலா விறல்வில்விசயன்.

     (இ-ள்.) வில்முன்னின் - வில்வித்தையைப்பற்றி ஆலோசிக்குமிடத்து,
தராதலம் மேல்-நிலவுலகத்திலே, தன் முன்-தனக்கு