(இ-ள்.)காளம் புயல் என்ன-கரிய (கார்காலத்து) மேகம் போல, நிறம் கரியார் - கருமைநிறத்தையுடையவர்களாகிய, எவர்உம்- தைத்தியர்களெல்லோரும், மீள படைகொண்டு-(முன் எடுத்து வந்தவை போதாமல்) மறுபடியும் பல ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு, விரைந்து- துரிதமாக வந்து, வெகுண்டு - கோபித்து, ஆளி திறல் மொய்ம்பனை- சிங்கத்தைப்போன்ற சாமர்த்தியத்தையும் வலிமையையுமுடைய அருச்சுனனை,வாளம் கிரி என்ன-சக்கர வாளமலைபோல,வளைந்து- (இடைவிடாமற்) சூழ்ந்துகொண்டு, அங்கு-அப்பொழுது [அவ்விடத்தில்], அடலால் - போர்செய்ததனால்,-(எ-று.)-'ஆர்த்தார்'என வருங் கவியோடு இயையும். என்ன -உவமவுருபு. மீள - (பகைவன்) பின்னிடையஎன்றுமாம். வாளக்கிரி - ஏழுதீவுகளையுஞ்சூழ்ந்த ஏழு சமுத்திரங்களுக்கும் அப்புறத்தில் பூமிக்குக் கோட்டைமதில்போலச் சுற்றியிருப்பதொரு மலை. (243) 68. | ஆர்த்தாரகல்வா னமுமாழ்கடலும் தூர்த்தார்சுடர்வெம் படைகொண்டெவரும் தேர்த்தானவர்வா னுறைதேவருமெய் வேர்த்தாரினிமேல் விளைவேதெனவே. |
(இ-ள்.) தேர்தானவர் எவர்உம் - (முன்னே போர்செய்ய அஞ்சிய) தேரின்மீதுள்ள தானவர்களெல்லாரும், ஆர்த்தார் - அஞ்சாது பல (தைத்தியர்கள் பொருதலைநோக்கி ஆனந்தத்தால்) ஆரவாரித்தார்கள்; சுடர் வெம்படை கொண்டு - (அருச்சுனன் மீது எறிந்த) ஒளியையுடைய கொடிய ஆயுதங்களால், அகல் வானம்உம் - பரந்த ஆகாயத்தையும், ஆழ் கடல்உம் - ஆழ்ந்த கடலையும்,தூர்த்தார் - நிறைத்தார்கள்;(அதுகண்டு), வான் உறை தேவர்உம் - ஆகாயத்திலிருந்து போர்காண்கின்ற தேவர்களும், இனி மேல் விளைவுஏது என-இனிமேல் (அருச்சுனனுக்கு) உண்டாகும் அபாயம் யாதோவென்று சங்கித்து, மெய்வேர்த்தார்-உடம்பு வேர்வையடைந்தார்கள்;(எ-று.) மெய்வேர்த்தல்-அச்சம்பற்றிய மெய்ப்பாடு. இனியென்பது, எதிர்காலப் பொருள்குறிப்பதோர் இடைச்சொல். விளைவு- உண்டாதல்: உண்டாகுஞ் செயலுக்குத் தொழிலாகுபெயர். (244) 69. | கூற்றொப்பனபல்படைகொண்டவன்மேல் சீற்றத்தொடெறிந் தனர்தீயவரும் ஆற்றற்சிலைவீரனுமவ்வவெலாம் மாற்றிச்சரமா ரிவழங்கினனால். | (இ-ள்.)தீயவர்உம் - கொடிய அசுரர்களும், கூற்று ஒப்பன- (நாசத்தைச் செய்தலால்) யமனைஒப்பனவாகிய, பல் படை-பல ஆயுதங்களை, கொண்டு - (கைகளில்) எடுத்து, அவன் மேல் - அவ்வருச்சுனன்மீது, சீற்றத்தொடு - கோபத்துடனே, எறிந்தனர் - வீசினார்கள்; ஆற்றல் சிலைவீரன்உம்-வலிய வில்லையுடையஅருச் |