பக்கம் எண் :

172பாரதம்ஆரணிய பருவம்

72.-பிரமாஸ்திரத்தினால்போர்க்களம் பட்ட நிலை.

காற்றாய்மிகமண்டுகடுங்கனலாய்க்
கூற்றாயவராவிகுடித்துகுசெஞ்
சேற்றாலொருபாதிசிவந்ததுபார்
ஏற்றானொருபங்கெனவெங்கணுமே.

     (இ-ள்.)(அப்பிரமாஸ்திரம்),-காற்று ஆய் - (விரைந்து செல்லுதலால்)
காற்றையொத்தும், மிக மண்டு கடு கனல் ஆய் - (எரிப்பதனால்)
மிகுதியாகப் பற்றியெரிகின்ற கொடிய நெருப்பையொத்தும், கூற்று ஆய்-
(கொல்லுதலால்) யமனையொத்தும், அவர் ஆவி குடித்து-அவ்வசுரர்களது
உயிரைப் பருகிவர,-உகுசெம் சேற்றால்-(அவர்களுடம்பினின்று)சிந்துகின்ற
சிவந்த இரத்தக்குழம்பினால்,பார்-(யுத்த) பூமி, ஏற்றான்ஒரு பங்கு என -
ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபிரானது ஒரு பாகம்போல, ஒரு பாதி
எங்கண்உம் - ஒரு பாதியிடம் முழுவதும், சிவந்தது-செம்மை நிறமடைந்தது;
(எ-று.)

     ஆய் -உவமவுருபு.  குடித்து = குடிக்க: எச்சத்திரிபு.  செஞ்சேறு -
செந்நீர்ச்சேறு.  ஒருபாதி - அசுரர்களுள்ள பாகம் மாத்திரம்;
அருச்சுனனுள்ள பாகத்தில் இரத்தம் இல்லையென்க. ஏறு என்னும்
ஆண்மைப்பெயர் பசுவிற்கு உரியதாதலை,"எருமையுமரையும்பெற்ற
மன்ன"என்னுந் தொல்காப்பியத்தால் அறிக.  அர்த்தநாரீசுவரனாகிய
சிவனது  உருவத்தில் தானாகியவலப்பாகம் சிவந்தும், பார்வதியாகிய
இடப்பாகம் கறுத்தும் இருத்தலால், 'ஏற்றானொருபங்கென'என்றார். இனி,
ஏற்றானொருபங்கெனஎன்பதற்கு - (மாவலிபக்கல் மூவடி) மண்ணைஇரந்த
திருமாலினது வலப்பாகம்போல என்றும் உரைக்கலாம்;"பிறைதங்கு
சடையானைவலத்தே வைத்து"எனப் பெரியார் பணித்தார். 
ஏற்றான்-
பிக்ஷாடனஞ்செய்தவனெனச் சிவபிரானுமாம்.                    (248)

73.-பிரமாஸ்திரம் படுத்திய பாடு.

நூறாயிரதேரணிநூறியுமேல்
ஆறாதசினத்துடனக்கணைபோய்
மாறாயவர்மார்பமும்வாண்முகமும்
சீறாவெதிர்சென்றுசெறிந்ததுவே.

     (இ-ள்.) அ கணை- அந்தப்  பிரமாஸ்திரம்,-நூறுஆயிரம் தேர்
அணி - இலட்சம் தேரின்வரிசைகளை,நூறிஉம்-பொடியாக்கியும், மேல்
ஆறாதசினத்துடன்-அதன்பின்புந் தணியாத கோபத்துடனே, போய்-சென்று,
மாறு ஆயவர்-பகையான அசுரர்களது, மார்பம்உம்-மார்பையும், வாள்
முகம்உம்-ஒளியையுடைய முகத்தையும் (நோக்கி), சீறா-கோபித்து,எதிர்
சென்று-(அம்மார்பு முகங்களின்) எதிரிற் போய், செறிந்தது-(அவற்றில்)
அழுந்திற்று;

     நூறாயிரதேர்= நூறாயிரந்தேர்: செய்யுளாதலின் விகாரம் பெற்று
வந்தது. மாறு - மாற்றார்க்குப்பண்பாகுபெயர். இனி,