83. | கன்மழைசொரிந்துவேகக் கனன்மழைவீசியெங்கும் மின்மழைசிந்திமிக்க வசனியின்மழைகள்வீழ்த்திச் சென்மழைசிதறியெல்லாத் திசைதொறும்பரந்துகொற்ற வின்மழைபொழிவான்றன்னைவளைந்ததுவெய்யமாயை. |
(இ - ள்.)வெய்ய மாயை - கொடிய அந்த மாயையானது,- கல் மழை சொரிந்து - சிலாவருஷத்தைப் பொழிந்துகொண்டும், வேகம் கனல் மழை வீசி - உக்கிரமான அக்கினிவருஷத்தைப் பெய்துகொண்டும், எங்குஉம் - எவ்விடத்தும், மின் மழை சிந்தி - மின்னலின் மழையைச் சொரிந்துகொண்டும், மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி - மிகுந்த இடியின் மழைகளைத்தள்ளிக்கொண்டும், செல் மழை சிதறி - மேகத்தினின்று பெய்யும் நீர்மழையை வர்ஷித்துக்கொண்டும், எல்லாத் திசைதொறுஉம் பரந்து - திக்குக்களெல்லாவற்றிலும் பரவி, கொற்றம் வில் மழை பொழிவான் தன்னை- வெற்றியைத்தருகின்ற வில்லினின்றும் அம்புமழையைச் சொரிகின்ற அருச்சுனனை,வளைந்த- சூழ்ந்துகொண்டது;(எ-று.) எங்கும் என்பதனைப்பிறவற்றுக்குங் கூட்டுக. (259) 84. | கோதிலாவிரதம்பூண்ட குரகதக்குழாமுமுட்கிச் சூதனுந்தடந்தேரூருந்தொழின்மறந்துயங்கிவீழத் தாதவிழலங்கலானுமற்றவன்றன்னைத்தேற்றித் தீதிலாவமோகபாணஞ்சிந்தையாற்றொழுதுவிட்டான். |
(இ - ள்.)(அம்மோஹாஸ்திரத்தால்), கோது இலா இரதம் பூண்ட - (தனது) குற்றமில்லாத தேரிற் பூட்டப்பட்டுள்ள, குரகதம் குழாம்உம் - குதிரைக் கூட்டமும், உட்கி - அஞ்சி, சூதன்உம்-சாரதியாகிய மாதலியும், தட தேர் ஊரும் தொழில் மறந்து - பெரிய இரதத்தைச் செலுத்துகின்ற செய்கையை மறந்து, உயங்கி வீழ - மயங்கி (த் தேரின் முன்னிடத்தே) விழ,-தாது அவிழ் அலங்கலான்உம் - பூந்தாதுகள் சொரியப்பெற்ற மாலையையுடையஅருச்சுனனும், அவன் தன்னைதேற்றி - அப் பாகனை மயக்கந் தெளியச் செய்து, தீது இலா - குற்றமில்லாத, அமோக பாணம் - (மாயையை நீக்கவல்ல) அமோஹாஸ்திரத்தை, சிந்தையால் தொழுது - மனத்தால் வணங்கி [அதற்குரியதேவதையைத் தியானித்து],விட்டான் - (மோஹாஸ்திரத்திற்கு எதிராக) விடுத்தான்;(எ - று.) கீழ்ப்பத்தொன்பதாங்கவியில் "ஆயிரம்பத்து வெம்போரடற் பரி பூண்டதேர்"என்றாராதலால்,இங்கே குரகதக்குழாம்என்றார். 'குலாம்' என்னும் பாடத்துக்கு, குலம் என்பதன் விகார மென்க. அமோகபாணத்துக்குத் தீதாவது - மாயையை முழுவதும் போக்கமாட்டாமை; அக்குற்றமில்லாத தென்க. யோக பாணம் என்றும் பாடம். (260) 85. | மாயவல்லிருளையெல்லாம்வான்கதிர்ச்செல்வனென்னச் சேயவப்பகுவாய்வாளிதிசைதொறுங்கடிந்தவெல்லை |
|