மீண்டுஉம்பரிபவப்படுத்தாய் - எங்களைமறுபடியும் அவமானப்படுத்தினாய்; அடா-! இனி-., உன்னை-,இன்னே - இப்பொழுதே, ஆர் உயிர் குடித்தும் - அருமையான உயிரைப் பருகுவோம்,'என்னா - என்று சொல்லிக்கொண்டு, - கடாம் மலைவயவன்மீது - மதசலத்தையுடைய மலைபோன்றவலிமையையுடைய அருச்சுனன்மேலே, கடு படை பலஉம் விட்டார் - கொடுமையான ஆயுதங்கள் பலவற்றையும் எறிந்தார்கள்; சூரன்உம் - அருச்சுனனும், நெடு பகழி தொடா - நீண்ட பாணங்களைத் தொடுத்து, தன்னால்- அதனால்,துணிந்து வீழ்த்தி - (அவர்கள் எறிந்த ஆயுதங்களைப்)பிளந்து தள்ளி,-(எ - று.)- 'கண்டங்கண்டான்'(90) என முடியும். கீழ் 74-ஆங்கவியில் ஒருகாற் பரிபவப்படுத்தியது கூறியதனால், இங்கே 'மீண்டும்பரிபவப்படுத்தாய்'என்றார். இனி, மீண்டும் விட்டார் என்றும் இயைக்கலாம். அடா - முன்னிலையிடைச்சொல்:இகழ்ச்சிதோன்ற நின்றது. ஆருயிர் குடித்த லென்பது - ஒருசொல் தன்மைப்பட்டு, கொல்லுதலென்னும் பொருளதாய், உன்னைஎன்னுஞ் செயப்படுபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாயிற்று. யானையை'மலை'என்றது - பெருமையும், வலிமையும், நீர்ப்பெருக்கமும் பற்றி. யானை- வீரனுக்கு, நடை வலிமை காம்பீரியங்களால் உவமை. வயவன் - வய என்ற உரிச்சொல் பகுதி. இனி, வயம் பகுதியெனக் கொண்டு, ஜயத்தையுடையவனென்றாகவுமாம். தொடா - இறந்தகால வினையெச்சம்:இனி, எதிர்மறைப் பெயரெச்சமாகக் கொண்டு இதுவரையில் ஒருகாலத்தும் எடுத்துத் தொடுக்காத அம்புகளால் எனவுமாம். (265) 89. | உரங்களுந்தோளுங்கண்ணு முதரமுமதரத்தோடு சிரங்களுந்தாளுநாளுஞ்செய்தவமுயன்றுபெற்ற வரங்களுமறையுமேன்மேல் வான்படைக்கலங்கள்வீசும் கரங்களுஞ்சரங்கள்கொண்டுகணத்திடைக்கண்டங்கண்டான். |
(இ-ள்.) (அருச்சுனன் அசுரர்களுடைய), உரங்கள்உம் - மார்புகளையும்,தோள்உம் - தோள்களையும்,கண்உம்-கண்களையும், உதரம்உம் - வயிறுகளையும்,அதரத்தோடு - வாய்களையும்,சிரங்கள்உம் - தலைகளையும்,தாள்உம்-கால்களையும்,நாள்உம் - ஆயுள் நாளையும், செய் தவம் முயன்றுபெற்ற வரங்கள்உம் - செய்தற்கு உரிய தவத்தைச் செய்து பெற்ற வரங்களையும்,மறைஉம்-மந்திரங்களையும்,மேல் மேல் வான் படைக்கலங்கள் வீசும் கரங்கள்உம்-(இடைவிடாமல்) ஒன்றன்மேலொன்றாகச்சிறந்த ஆயுதங்களைஎறிகின்ற கைகளையும், சரங்கள் கொண்டு - (தனது) அம்புகளினால்,கணத்திடை - நொடிப்பொழுதிலே, கண்டம் கண்டான் - பல துண்டுகளாகச் செய்தான்; (எ- று.)
'செய்தவமுயன்றுபெற்ற'என்னும் அடைமொழியை மறைக்கும் கூட்டுக. படைக்கலம் - சேனைக்கருவியெனக்காரணப்பெயர்: |