படுத்தற்றொழிற்குக்கருவியெனினுமாம். கொண்டு - மூன்றாம்வேற்றுமைச் சொல்லுருபு. கண்டங் காணுதலாவது - பயன்படாதபடி அழித்தல். (266) 91.-அற்றகுறைஅவயவத்தோடு கூடியதனால்முக்கோடி யசுரச்சேனையும்மீண்டும் போர்க்குவர, அருச்சுனன் சிந்தை கொள்ளல். அற்றனகுறைகளெல்லா மவயவம்பொருந்திமீண்டும் உற்றனமூன்றுகோடி சேனையுமுருத்தெழுந்த வெற்றிவேற்குமரனன்ன விசயனுங்கைசலித்து மற்றிதற்கென்செய்வேனென் றினைவுடன்மதிக்குமேல்வை. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ - ள்.)அற்றன குறைகள் எல்லாம் - அவயவங்களறுபட்ட குறையுடம்புகளெல்லாம், அவயவம் பொருந்தி மீண்டுஉம் உற்றன - (அறுக்கப்பட்ட) அவ்வவ்வுறுப்புக்களோடு கூடி மறுபடியும் போர்செய்யப் பொருந்தினவாய், மூன்று கோடி சேனைஉம்- முக்கோடியசுர சைனியமும், உருத்து எழுந்த - கோபித்து (அருச்சுனன்மீது) எழுந்தன;(அதுகண்டு), வெற்றிவேல் குமரன் அன்ன விசயன்உம் - ஜயத்தைத்தருகின்ற வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியனையொத்த அருச்சுனனும், கை சலித்து - கை தளர்ந்து, மற்று இதற்கு என் செய்வேன் என்று - இனி இதற்கு யாது செய்வேன் என்று, இனைவுடன்- வருத்தத்துடனே, மதிக்கும் ஏல்வை- ஆலோசிக்குஞ் சமயத்தில்,- (எ - று.)-'அசரீரியுரைத்தது' என மேலிற் கவியோடு இயையும். உற்றன -முற்றெச்சம். மற்று - இங்கே, பின் என்னும் பொருளது. இனைவு- தொழிற்பெயர்:வு-விகுதி. (267) 92.-இரண்டு கவிகள்- அசரீரி அசுரர்களின் வரத்தையும் அவர்களைக்கொல்லவேண்டிய உபாயத்தையும் கூறுவன. வென்றிகொள்வீரவாகை வீரவில்விசயகேளாய் தென்றிசைமறலிபாலித் தீயவஞ்சகர்முன்பெற்ற வன்றிறற்படையுமிக்க வரமுமெய்வலியுமுண்டால் என்றசரீரிபின்னு மின்னவையுரைத்ததம்மா. |
(இ - ள்.)அசரீரி - அரூபியாகிய ஆகாசவாணி,-(அருச்சுனனை நோக்கி), 'வென்றிகொள் - ஜயத்தை யடைவதற்குக்காரணமான, வீரம் - பராக்கிரமத்தைக் குறிக்கின்ற, வாகை-வாகைப்பூ மாலையையும்,வீரம் வில் - வலிய வில்லையுமுடைய,விசய - அருச்சனனே! கேளாய் - (யான் சொல்வதைக்) கேட்பாயாக:தென்திசை மறலிபால் - தெற்குத் திக்குப்பாலகனாகிய யமனிடத்தில், இ தீய வஞ்சகர் - கொடிய வஞ்சனையையுடையஇந்த அசுரர்கள், முன் பெற்ற - முற்காலத்தில் பெற்ற, வன் திறல் படைஉம் - மிக்க |