வலிமையையுடையஆயுதங்களும், மிக்க வரம்உம் - மிகுந்த வரங்களும், மெய் வலிஉம் - தேகபலமும், உண்டு - உள்ளன, என்று - என்றுகூறி, பின்னும் - மீண்டும், இன்னவை - இவ்வார்த்தைகளை,உரைத்தது - சொல்லிற்று;(எ-று.)-அவைமேற்கவியிற்கூறுகின்றார். மறல் - கொலைத்தொழில்;அஃது உடையவன், மறலி: இ - பெயர் விகுதி, பெற்ற என்பதை, வரம் மெய்வலி இவற்றுக்குங் கூட்டுக. அசரீரி - சரீரம் அற்றது. அம்மா - இடைச்சொல்: ஈற்றசை: வியப்புப்பொருளதாகவுமாம். ஆல் - தோற்றம். (268) 93. | வெய்யவெம்படைகட்கெல்லாம் விளிகிலர்மெய்ந்நூறாகக் கொய்யினுமுருவமீண்டுங் கூடுவர்குறிப்பினின்று கையினாவுடன்வாய்சென்றுகலந்திடுங்கணத்தினம்பால் எய்திடுகென்றுவீரற் குறுதியுமிசைத்ததன்றே. |
(இ-ள்.)(இவ்வசுரர்கள்),-வெய்யவெம் படைகட்கு எல்லாம் - மிகவுங் கொடிய ஆயுதங்களனைத்துக்கும்,விளிகிலர்-இறக்கமாட்டார்கள்;மெய் நூறு ஆக கொய்யின்உம் - உடம்பை நூறு துண்டாக அறுத்தாலும், உருவம் மீண்டுஉம் கூடுவர் - வடிவம் முன்போலவே மறுபடியும் பொருந்தப்பெறுவர்:(இவர்களை),இனாவுடன்- பரிகாச வார்த்தையுடனே, கை வாய் சென்று கலந்திடும் கணத்தின் - கையானது வாயைச்சென்று கூடுகின்ற சமயத்தில், குறிப்பில் நின்று - கவனத்தோடு இருந்து, அம்பால் எய்திடுக - அம்புகளினால்எய்வாயாக, [அப்பொழுதுஅம்பெய்தால் அழிந்துவிடுவர்],என்று-,வீரற்கு - அருச்சுனனுக்கு, உறுதிஉம்- (பகைவரைக் கொல்லுதற்கு) நல்ல உபாயத்தையும், இசைத்தது - (அசரீரி) சொல்லிற்று;(எ-று.)-அன்றே- ஈற்றசை. வெய்ய வெம் -ஒருபொருட்பன்மொழி. விளிதல் இறத்தலாதலை, "உலகின்,விளிநோக்கி யின்புறூஉங் கூற்று"என்ற விடத்துங் காண்க. உருவம் - ரூபம். இனா- நகைச்சொல். கையில் நாவுடன் வாய்சென்று என்றுபிரித்து, நாவுடன் வாயிற் கை சென்று கலந்திடுங் காலத்து எனினுமாம். (269) 94.-அருச்சுனன்தேரைத் திரியவோட்டிப் போர்க்குச் சித்தனாக,அவுணர் வீரன்புறங்கொடுத்தானென்று கருதுதல். வானிடத்தரூபிசொன்ன வாசகமனத்திற்கொள்ளாத் தேனுடைத்தெரியல்வீரன் றேரினைத்திரியவோட்டிக் கானிடைக்கடவுள்வேடன் றருங்கணைகரத்திற்கொண்டு தானுடைத்தனுவிற்பூட்டி யனுப்படச்சமைந்ததோரார். |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்)வானிடத்து - ஆகாயத்தினிடத்திலே, அரூபி - அசரீரியாகிய ஆகாயவாணி, சொன்ன-,வாசகம்-வார்த்தையை |