பக்கம் எண் :

186பாரதம்ஆரணிய பருவம்

     சமுகம்-ஸமூஹம்;வேனில் - இங்கே, சித்திரை மாதமும்
வைகாசிமாதமுமாகிய இளவேனிற்பருவம்.  மன்மதனுக்கு வேனிற்காலத்திலே
போர்த்தொழிற்கண்ணே ஊக்கமுங்  களிப்பும் உண்டாதல்பற்றி, அப்பொழுது
அவனுடம்பு பூரித்து அழகுசிறந்து  விளங்குமாதலால்.  'வேனில்வேள்'
என்றார். வேள் - யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடையவன்;அல்லது
ஆடவர்க்கும்மகளிர்க்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பத்தை விளைப்பவன்.
'வேனில்வேள்'என்றது, குமரவேளைவிலக்கிநின்றது.  ஆவலங்கொட்டி
யார்த்தலாவது - தோற்றவர்க்கு அவமானந் தோன்ற வென்றவர் வாயினால்
ஒருவகைச் சத்தத்தையெழுப்பி ஆரவாரித்து ஆடுதல்.  செருக்குத்தோன்ற
ஒலிசெய்தலுமாம்.  ஆவலம்-'சீழ்க்கை','வீளை'என்பன போல்வதொரு
கொக்கரிப்பு என உணர்க.  கனலிற்பொங்கி என்று பிரதிபேதம்.       (271)

96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
அவுணரங்கம்பொடியாதல்.

உரம்பட்டவஞ்சர்சேனையொருப்பட்டவுறுதிநோக்கித்
திரம்பட்டசிலைக்கைவீரன்சிலீமுகந்தெறித்தபோதச்
சரம்பட்டதனுசரங்கஞ் சங்கரன்செங்கையம்பால்
புரம்பட்டபரிசுபட்டுப் பொடிந்தனபொடியாய்மன்னோ.

     (இ-ள்.) உரம்பட்ட - வலிமைமிகுந்த, வஞ்சர் - வஞ்சகராகிய
அசுரர்களது, சேனை-,ஒருப்பட்ட - (தான் கருதியபடியே
அவமதிப்பொலியோடு கையை வாயிலேவைத்து) ஒருமைப்பட்ட, உறுதி -
நன்மையை, நோக்கி - பார்த்து,-திரம்பட்ட சிலைகை வீரன் -
உறுதிபொருந்திய வில்லையுடையகையையுடைய அருச்சுனன்,-சிலீமுகம்
தெறித்தபோது - அம்பை எய்தமாத்திரத்தில்,- அ சரம் பட்ட தனுசர்
அங்கம் - அந்த அம்பு படப்பெற்ற அசுரர்களது உடம்புகள், சங்கரன் செம்
கை அம்பால் புரம் பட்ட பரிசு பட்டு - சிவபிரானது சிவந்த
கையினாலெய்யப்பட்ட(திருமாலாகிய) அம்பினால்திரிபுரம் அடைந்த
தன்மையை யடைந்து, பொடி ஆய் பொடிந்தன - நீறாயொழிந்தன;(எ-று.)-
மன், ஓ -ஈற்றசைகள்.

     ஒருப்படுதல் -ஒருங்கே தன்மனப்படியாதல்.  திரம்-ஸ்த்திரம்.
சிலீமுகம் - ஸிலீமுகம்:கூர்மையை முனையிலேயுடையதென்று பொருள்.
இங்கே, பாசுபதம்.  பொடிதல்-தூளாதல்.                       (272)

97.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தின் செய்கை.    

உருத்ததுமிகவுமண்ட முடைந்திடவுடன்றுபொங்கிச்
சிரித்ததுதனுசர்மெய்யுஞ் சிந்தையுஞ்சேரப்பற்றி
எரித்ததுதூநீராடி யிவனிடந்தன்னில்வந்து
தரித்ததுமீண்டுமந்தச் சங்கரன்செங்கைவாளி.

     (இ-ள்.)சங்கரன் செம் கை - சிவபிரானது சிவந்தகையாற்
கொடுக்கப்பட்ட, அந்த வாளி - அந்தப் பாசுபதாஸ்திரமானது,-