பக்கம் எண் :

188பாரதம்ஆரணிய பருவம்

99.-அருச்சுனனைப்பற்றியதேவர்களின்
கொண்டாட்டம்

ஆர்த்தாரணிகூரலர்மாமழை யால்விசும்பைத்
தூர்த்தார்துதித்தார்மதித்தார்நனி துள்ளுகின்றார்
போர்த்தானவர்தஞ்செருக்காற்படு புன்மையெல்லாம்
தீர்த்தானிவனென்றகல்வானுறை தேவரெல்லாம்.

     (இ-ள்.) அகல்வான் உறை தேவர் எல்லாம் - பரந்த மேலுலகத்தில்
வசிக்கின்ற தேவர்கள் யாவரும்,-'இவன்- இவ்வருச்சுனன், போர்
தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்-யுத்தத்தில்வல்ல அசுரர்களது
கர்வத்தால் (நாம் இதுவரையிலும்) அனுபவித்துவந்த
துன்பங்களனைத்தையும்,தீர்த்தான் - நீக்கினான்,'என்று - என்று
எண்ணியுஞ் சொல்லியும், ஆர்த்தார்-ஆரவாரஞ்செய்து, அணி கூர் அலர்
மா மழையால்-அழகுமிக்க சிறந்த கற்பகப்பூமாரியால், விசும்பை தூர்த்தார்-
ஆகாயத்தை நிறைத்து, துதித்தார் - (அருச்சுனனைப்)புகழ்ந்து, மதித்தார்-
கௌரவித்து, நனி துள்ளுகின்றார்- (ஆனந்தத்தால்) மிகவுங்
குதிக்கின்றவரானார்;(எ-று.)-வெகுநேரம்ஆனந்தக் கூத்தாடியமை தோன்ற
'துள்ளுகின்றார்'என்றார்.                                   (275)

100.-இரத்தப்பெருக்கின் வருணனை.

கூரும்படையுங்குடையுங்கொடி யுங்கொழித்துத்
தேருங்கரியும்பரியுந்திசை தோறுமுந்தி
ஊருங்குருதிக்கடல்பொங்கி யுவர்க்கடன்மேற்
போரும்பொரப்போயணியோடு புகுவபோலும்.

     (இ-ள்.) ஊரும்- (கடலைநோக்கிச்) செல்லுகின்ற, குருதி கடல்-
இரத்தசமுத்திரமானது,-கூரும்- மிகுந்த, படைஉம்-ஆயுதங்களையும்,
குடைஉம் - குடைகளையும்,கொடிஉம் - துவசங்களையும்,கொழித்து -
முன்னே செலுத்தி வருதலினாலும்,-தேர்உம்- தேர்களையும்,கரிஉம் -
யானைகளையும்,பரிஉம் - குதிரைகளையும்,திசைதோறும்உம் - எல்லாத்
திக்குகளிலும், உந்தி - அலைத்துத்தள்ளுதலினாலும்,-உவர்கடல் மேல் -
உப்புக் கடலின்மீது, பொங்கி - (தனக்கு ஒப்பாகமாட்டாதென்று)
சீறியெழுந்து, போர் உம் பொர - யுத்தத்தையுஞ் செய்யும்பொருட்டு,
அணியோடு போய் புகுவ-சைனியத்துடனே மேற்சென்று சேர்வதை,
போலும்-ஒக்கும்;(எ-று.)

     அருச்சுனனால்வெட்டி வீழ்த்தப்பட்ட அசுரரின் உடலிலிருந்து
பெருகும் குருதியின் கடல், படை குடை கொடிகளைக்கொழித்தலாலும்
தேர் முதலியவற்றைத் திசைதோறும் உந்துவதாலும் உவரிக்கடல்மீது பொரச்
செல்வது போலுமென்றவாறு.  தற்குறிப்பேற்றவணி.  திரைதோறும் என்றும்
பாடம்.                                                 (276)

101.-போர்களத்துஅருச்சுனன் வெற்றியோடு நிற்றல்.

தத்திக்குருதிக்கடல்பொங்கத் தனித்தனிநின்று
எத்திக்கினும்வெம்பிணக்குன்ற மெழிலொடோங்கப்