பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்189

பத்திப்படமேற்பருந்தின்குலம் பந்தர்செய்யக்
கொத்துற்றதண்டார்த்திறற்கோதண்ட வீரனின்றான்.

     (இ-ள்.) குருதிகடல் - இரத்தவெள்ளம், தத்தி பொங்க - பாய்ந்து
பெருகவும்,-எதிக்கின்உம் - எல்லாத் திசைகளிலும், வெம் பிணம் குன்றம்
- மலைபோன்றகொடிய பிணக்குவைகள், தனி தனி நின்று - வெவ்வேறாக
நின்று, எழிலொடு ஓங்க-எழுச்சியோடு உயர்ந்து தோன்றவும்,-பருந்தின்
குலம்-பருந்துகளின் கூட்டம், மேல் - ஆகாயத்திலே, பத்தி பட - வரிசை
வரிசையாக, பந்தர் செய்ய - (நிழலின் பொருட்டுப்) பந்தல்
போகட்டாற்போல இடைவிடாது பரவவும்,-கொத்துஉற்ற தண் தார் திறல்
கோதண்டம் வீரன் - பூங்கொத்து நிறைந்த (தேனினாற்)குளிர்ந்த
மாலையையணிந்தவலிமையையுடைய வில்லையுடையஅருச்சுனன்,
நின்றான்- (போர்க்களத்திலே) நின்றான்;(எ-று.)

    கோதண்டமென்னும் இராமனது வில்லின் பெயரால் அருச்சுனனது
காண்டீவத்தைக் கூறினார்,'துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்தில் இவன்
இராமன் போல்வான்'என்னுஞ்சிறப்புத் தோன்றுதற்கு.  பக்தி - பங்க்தி.
                                                    (277)

102.-அசுரமங்கையரின் அரற்றொலி.

மின்போனுடங்கவிடைவேல்விழி நீர்ததும்பப்
பொன்போலுருவங்கருகும்படி பூழிபோர்ப்ப
அன்போடவுணர்மடமாத ரரற்றுமோதை
என்போலுமென்னினிடிபோல்வந் திசைத்ததெங்கும்.

     (இ - ள்.) அவுணர் மடம் மாதர் - (இறந்துபோன) அசுரர்களின்
மனைவிமார்களாகியஇளையமகளிர், இடை - (தங்களது) இடுப்பு,
மின்போல் நுடங்க - கொடிமின்னல்போலத் துவளவும்,- வேல் விழி -
வேலாயுதம் போன்ற கண்கள், நீர் ததும்ப-கண்ணீர் நிறையவும்,
பொன்போல் உருவம் கருகும்படி - பொன்னையொத்தநிறமமைந்த மேனி
கறுக்கும்படி, பூழி போர்ப்ப - புழுதி மூடவும், (வந்து விழுந்து புரண்டு),
அன்போடு - (கணவர்பாலுள்ள) அன்புடனே, அரற்றும் - கதறியழுகின்ற,
ஓதை-ஓசை,-என் போலும் என்னின் - எதனையொக்குமென்றால்,
இடிபோல் - இடியோசையைப்போல, எங்கும் வந்து இசைத்தது -
எவ்விடத்துஞ் சென்று ஒலித்தது;(எ-று.)

     இடைக்கு மின்உவமை - ஒளியும் மெல்லிதாயிருத்தலும் பற்றியும்,
விழிக்கு வேலுவமை - கூர்மையுங் காமநோயையுண்டாக்கி ஆடவரை
வருத்தலும் பற்றியும், உருவத்துக்குப் பொன் உவமை - நிறமும் அருமையும்
பற்றியும் என்க.  மின் - மின்னுவது, வினைமுதற் பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது.  அன்பாவது - உறவினரிடத்து மனமகிழ்ச்சி நிகழ்த்திப்
பிணிப்பித்து நிற்கும் நேயம்.  வன்போடு எனப்பிரித்து - வலிய
துன்பத்தோடு என்று உரைக்க