பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்191

மாதலியும், துனைதேர் - (இயல்பிலே) விரைந்துசெல்லுந் தேரை, நனி
தூண்டும் எல்லை- நன்றாகச்செலுத்திவருமளவில்,-(எ-று.) 'காணாவினவ'
என மேற்கவியோடு இயையும். மின் ஆரும் - மின்னலையொத்த
என்னவுமாம்.  நடாத்துக=நடத்துக.                           (280)

105.-அந்தரத்தில்ஓரூரைக்கண்டு அருச்சுனன்
மாதலியை வினவுதல்.

செம்பொற்புரிசைதிகழ்கோபுரச் செம்பொன்மாடத்து
அம்பொற்கொடிசேர்நகரந்தரத் தொன்றுகாணா
வம்பிற்பொலிதார்த்தடந்தேர்விடு மாட்சியானை
விம்பத்திறல்வார்சிலைவீரன்வினவவன்னான்.

     (இ - ள்.)விம்பம் - வட்டமாக வளைதலையுடைய,திறல் -
வலிமையுள்ள, வார் - நீண்ட, சிலை- வில்லைக்கொண்ட,வீரன் -
அருச்சுனன்,-செம் பொன் புரிசை - சிவந்த பொன்னினாலாகிய
மதில்களிலும், திகழ் கோபுரம் - விளங்குகின்ற கோபுரங்களிலும், செம்பொன்
மாடத்து - சிவந்த பொன்னின்மயமான வீடுகளிலும், அம்பொன் கொடி -
அழகிய பொன்னினாலாகியகாம்பையுடைய வெற்றித்துவசங்கள், சேர் -
பொருந்தியுள்ள, நகர் ஒன்று - பட்டணம் ஒன்றை, அந்தரத்து -
ஆகாயத்திலே, காணா- பார்த்து,-வம்பின் பொலி தார் - வாசனையோடு
விளங்குகின்ற வெற்றிமாலையையணிந்த,தட தேர் விடு மாட்சியானை-
பெரியதேரைச்செலுத்துகின்ற பெருமைக்குணமுடைய மாதலியை, வினவ -
(இதன் வரலாறு யாதென்று) கேட்க,-அன்னான்- அவன்,-(எ-று.)-
'கூறுவானானான்'என வினைவருவித்து முடிக்க.  அது மேல் ஐந்து
கவிகளிற் கூறுகின்றார்.

     இரண்டாம்அடியில், பொன்-அதனாலாகியதுவசதண்டத்துக்குக்
காரணவாகுபெயர்.                                     (281)

106.-ஐந்துகவிகள் -அந்தரத்துத்தோன்றிய
இரணியபுரத்தைப்பற்றி மாதலிகூறுதலைத்தெரிவிக்கும்.

மன்னுந்தனுசகுலமாதரில் வஞ்சநெஞ்சக்
கன்னங்கரியகுழற்காலகை காமர்சோதிப்
பொன்னங்கொடிபோலெழில்கூர்நுண் ணிடைப்புலோமை
என்னும்பெயராரிருவோருள ரென்றுமுள்ளார்.

     (இ - ள்.) மன்னும் - நிலைபெற்ற,தனுச குலம் மாதரில் -
அசுரகுலத்து மகளிருள், வஞ்சம் நெஞ்சம் - வஞ்சனையையுடைய
மனத்தையும், கன்னங்கரிய குழல் - மிகவுங்கறுத்த கூந்தலையுமுடைய,
காலகை - காலகையும், காமர் சோதி - விரும்பப்படுகிற [அழகிய]
ஒளியையுடைய, பொன் அங் கொடி போல் - அழகிய பொற்கொடிபோல,
எழில் கூர் நுண் இடை - அழகு மிக்க மிகச் சிறியதான இடையையுடைய,
புலோமை - புலோமையும், என்னும் பெயரார் - என்கிற பேருள்ளவர்களும்,
என்றும் உள்ளார் - எப்