தல்பற்றி, மனம்மிக்கவிரைவுக்கு உவமை கூறப்படும். மற்று - அசை. 'மற்றவன்'என எடுத்து - தேரிலுள்ளவரிருவருள் வீரனொழியப்பாகனாய் நின்றவன் எனினுமாம். (288) 113.-தேர்நாணொலிகளைக்கேட்டுக்காலகேயர் திடுக்கிடுதல். தேராரவாரத்துடனேதிண் சிலைவலான்றன் போராரவாரச்சிலைநாணொலிமீதுபோக வாராரவாரத்திடிகேட்ட வரவமொத்தார் காராரவாரமெனப்பொங்குமக் காலகேயர். |
(இ - ள்.)திண் சிலைவலான் தன் - வலிய வில்லில்வல்ல அருச்சனனது தேர் ஆரவாரத்துடனே - தேரின்பேரொலியோடே, போர் ஆரவாரம் சிலைநாண் ஒலி - போரிற் கொண்டாட்டத்தையுடைய வில்லினது நாணியின் ஓசையும், மீது போக - அந்நகரத்தின்மேற்செல, கார் ஆரவாரம் என பொங்கும் அக்காலகேயர் - மேகத்தினது கிளர்ச்சிபோல மேலெழுந் தன்மையையுடைய அந்தக் காலகேயர்கள், ஆர் ஆரவாரத்து இடி கேட்ட - நிறைந்த ஒலியையுடைய இடியைச் செவியுற்ற, அரவம் - நாகங்களை,ஒத்தார் - போன்றார்கள்;[திடுக்கிட்டார்என்றபடி] ; (எ-று.) இரண்டாம்அடியில் 'பேராரவாரம்'என்னும் பாடம், மோனைத்தொடைக்குப்பொருந்தாது. (289) வேறு. 114.-ஓசையைப்பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல். இந்தவோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்தவோதை யோவதன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன்வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்தவோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும். |
இதுமுதல்,நான்குகவிகள் - குளகம். (இ - ள்.)வஞ்சர் யாவர்உம் - வஞ்சகராகிய அசுரர்களெல்லோரும், இந்த ஓதை - இவ்வோசை,-எழிலிஏழ்உம் ஊழிநாள் இடித்து எழும் அந்த ஓசை ஓ - ஏழுமேகங்களும் யுகாந்த காலத்தில் இடி யிடித்தலாலுண்டாகின்ற அவ்வோசையோ? அது அன்றி - அதுவல்லாமல், ஆழி பொங்கும் ஓதை ஓ - (அக்காலத்தில்) கடல் மேற்பொங்குவதனாலுண்டாகும்ஓசையோ? (அல்லது), கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதை ஓ - (தேவசேனாதிபதியாகிய)சுப்பிரமணியமூர்த்தி ஆகாசமார்க்கத்திலே தேரைச் செலுத்திவருகிற ஓசைதானோ? எந்த ஓசை - (இவ்வோசைகளுள்) எவ்வோசையாம்? என்று அயிர்த்து அயிர்த்து - என்று பலவாறு சங்கித்து,-(எ-று.)-'தெழித்து'என மேற்கவியோடு தொடரும். |