ஏழுமேகங்களாவன- சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரிதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன; இவை முறையே மணி, நீர், பொன், பூ, மண், கள், தீ இவற்றைப் பொழிவன. சருவசங்கார காலத்தில் மேகங்களேழும் ஒருங்கேயெழுந்து அவ்வவற்றிற்கு உரிய மழையை இடைவிடாது பொழிந்து உலகங்களைஅழிக்கு மென்பதும், கடல் பொங்கியெழுந்து உலகை மூடு மென்பதும், நூற்கொள்கை. அயிர்த்து அயிர்த்து - அடுக்கு, மிகுதிபற்றியது அயிர்த்துயிர்த்து என்றும் பாடம். இதுமுதற்பதினேழுகவிகள் - பெரும்பாலும் ஏழாஞ்சீர் கூவிளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாகி வந்த எழுசீராசிரிய விருத்தங்கள். (290) 115-மூன்றுகவிகள் - காலகேயர் சினந்து போர்க்குப் பரபரப்புக்கொண்டுவருவதைத் தெரிவிக்கும். தெழித்துரப்பியெயிறுதின்று வைதுசெய்யகண்கள்தீ விழித்துமீசைநுனிமுறுக்கி வெய்யவீரவாளுறை கழித்தெழுந்துபொங்குகின்ற காளகூடமென்னவே கொழித்தழன்றுமண்ணும்விண்ணு மின்றுகோறுநாமெனா. |
(இ-ள்.)தெழித்து - கோபங்கொண்டு, உரப்பி - அதட்டி, எயிறுதின்று - பற்களைக்கடித்து, வைது - வசைமொழிகளைச்சொல்லி, செய்ய கண்கள் தீ விழித்து - சிவந்த கண்கள் (கோபத்தால்) நெருப்புச்சிந்த விழித்துப்பார்த்து, மீசை நுனி முறுக்கி-மீசையினுடைய நுனியை (க்கையால்) திருகி, வெய்ய வீரம் வாள் உறை கழித்து - கொடிய வலிமையையுடைய வாளைஉறைநீக்கியெடுத்து, எழுந்து-(தத்தமிருப்பிடத்தைவிட்டு) எழுந்து, பொங்குகின்ற காளகூடம் என்னஏ - (பாற்கடலிற்) கொதித்தெழுந்த காளகூடமென்னும் பெருவிஷம்போல, கொழித்து - (தீயை) வீசி, அழன்று - சீறி, 'மண்உம்- நிலவுலகத்தாரையும், விண்உம் - வானுலகத்தாரையும், இன்று - இப்பொழுது, நாம்-,கோறும் - கொல்வோம்,'எனா- என்றுசொல்லி,-(எ-று.)-'ஓடுவாரும்'(116) என மேலே தொடரும். 'உரப்பியெயிறுதின்று வைது கண்கடீவிழித்து'என்பது வரையில் சினத்தின்செயல். மீசை முறுக்குதல் முதலியன, வீரத்தின்செயல். மீசை - மிசை [மேலிடத்து]உள்ளது: இது, மேல் உதட்டின் மீதுள்ள மயிரைக் காட்டும். உறை - படைக்கூடு;இது, ஆயுதம் உறுதற்கு இடமாதல்பற்றி வந்த பெயர். உறுதல் - பொருந்துதல், விழித்தல் -உருட்டிப்பார்த்தல்.(291) 116. | ஓடுவாருமந்தவோதை யெதிருடன்றுறுக்கியே நாடுவாருநமர்களாண்மை நன்றுநன்றெனாநகைத்து ஆடுவாருமமரர்வாழ்வு பாழ்படுத்துமாயுதம் தேடுவாருமெண்ணிறந்த தேர்களேறுவாருமே. | |