28.-வியாசன் 'பகைவர்தீங்குபுரியினும் நும்போலியார் சஞ்சலமடையார்: அஞ்சலீர்'என்று சொல்லிப்போதல். வெஞ்சலமனத்தரானோர் விரகினாற்கூட்டங்கூட்டி நஞ்சலதுவமையில்லா நவைபுரிந்தனர்களேனுஞ் சஞ்சலமும்மைப்போலுந் தரணிபருறுதல்செய்யார் அஞ்சலிரென்றுமீள வாரணமுனியும்போனான். |
(இ-ள்.) 'வெம் சலம் மனத்தர் ஆனோர்-கொடியமாறுபாட்டைக்கொண்ட மனத்தையுடையவரானவர்கள், விரகினால் - தந்திரமாக, கூட்டம் கூட்டி - சபைவைத்து ஆலோசித்து, நஞ்சுஅலது உவமை இல்லா-விஷமல்லாமல் வேறு உவமையில்லாத (விஷத்துக்குச் சமானமான), நவை-தீங்குகளை, புரிந்தனர்கள் ஏன்உம் - செய்தார்களாயினும், உம்மை போலும் தரணிபர் - உங்களைப் போன்ற அரசர்கள், சஞ்சலம் உறுதல் செய்யார் - கவலைப்படமாட்டார்கள்; (ஆதலால்), அஞ்சலிர் - பயப்படாதீர்கள்,' என்று - என்று தைரியஞ்சொல்லிவிட்டு, - ஆரணம் முனிஉம் - வேதவியாச முனிவனும், மீள போனான் - திரும்பிப்புறப்பட்டுப்போனான்; பிராணத்தைப்போக்கவல்ல தீங்கு என்பார் 'நஞ்சலதுவமையில்லா நவை'என்றார். சலம்-வடசொல். முனியும்போனான் என்ற உவமை, கீழ் அருச்சுனனும்போனா னென்றதைத் தழுவியதனால், இறந்ததுதழுவியது. தரணிபர்-பூமியைக் காப்பவர்: வடசொல். அஞ்சலிர்- ஏவற்பன்மையெதிர்மறைவினைமுற்று. உவமை-உபமா: வடசொல். (28) 29.-இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்: தாபசவேஷத்தோடுஅருச்சுனன் சென்று வடதிசை யெல்லையைச்சேர்தலைத்தெரிவிக்கும். மரவுரியுடையவன்சென்னி வகுத்தசெஞ்சடையன்றூணிச் சரமுடனங்கியீந்த தனுவினன்றறத்தின்மேலே புரிதருமனத்தனெல்லாப் புண்ணியங்களுக்குந்தானே உரைபெறுதசரதன்றன் மகனலாதுவமையில்லான். |
(இ-ள்.) எல்லாம் புண்ணியங்களுக்குஉம் - நல்வினைகள் எல்லாவற்றுக்கும், தானே-, உரை பெறு - (இடமாகச்)சொல்லப் பெற்ற, தசரதன் தன் - தசரதசக்கரவர்த்தியினது, மகன் அலாது - குமாரனாகிய ஸ்ரீராமபிரானையே யல்லாமல், உவமை இல்லான் - (வேறு) உபமானத்தை (த் தனக்கு)ப் பெறாத அருச்சுனன்,- மரவுரி உடையன் - மரவுரியாகிய ஆடையையுடையவனும், சென்னி வகுத்த செம் சடையன் - தலையில் வகுத்துக்கட்டிய சிவந்த சடையையுடையவனும், தூணி சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் - அம்பறாத்தூணியிலுள்ள அம்புகளுடனே அக்கினிபகவானாற் கொடுக்கப்பட்ட வில்லையுடையவனும், தவத்தின் மேலே புரிதரு மனத்தன் - தவத்தில் விருப்பங்கொண்ட மனமுடையவனுமாகி, - (எ-று.)- "உத்தர முடிவு கண்டான்" என முடியும். |