தங்களை,எதிர் எதிர் - எதிரே எதிரே, தொட - (அசுரர்கள்) தொடுக்க,- (எ-று.)-'மகபதிமகனும்அவுணரும் பொருதனர்'என வருங் கவியோடு இயையும். நொடி -இயற்கையில் ஒருவன் ஒருமுறை கையை நொடித்தற்கு வேண்டும் பொழுது. பவனன் - அசுரர் எய்யும் அம்புக்கும், சருகு - அருச்சுனன் எய்யும் அம்புக்கும் உவமை. சருகு - உலர்ந்த இலை. பரிய என்றும் பாடம். (309) 134.-அருச்சுனனுடன்அவுணர் கடும்போர் விளைத்தல். வரிசிலைவிறலுடைமகபதிமகனும் எரிவிழியவுணரு முறைமுறையிகலிப் பொருதனர்ரகுபதி புதல்வனுமடுபோர் நிருதருமெதிர்பொரு மமர்நிகரெனவே. | (இ-ள்.) வரிசிலைவிறல் உடை - கட்டமைந்த வில்லின்வலிமையையுடைய, மகபதி மகன்உம் - இந்திரகுமாரனான அருச்சுனனும், எரி விழி அவுணர்உம் - நெருப்பைச் சிந்துகின்ற கண்களையுடையஅசுரர்களும், முறை முறை - கிரமந்தப்பாமல், இகலி- பராக்கிரமித்து,-ரகுபதிபுதல்வன்உம் - ரகுகுலத்துக்குத் தலைவனான தசரதசக்கரவர்த்தியினது திருமகனானஸ்ரீராமபிரானும், அடு போர் நிருதர்உம் - கொல்லுகின்ற போர்த்தொழிலில் வல்ல இராக்கதர்களும், எதிர் பொரும் - எதிர்த்துச்செய்த, அமர் - போர், நிகர் என - ஒப்பு என்னும்படி, பொருதனர் - போர்செய்தார்கள்; முறைமுறைஎன்பதற்கு - இவர்விட்ட ஆயுதங்களைஅவன் தான்விடும் அம்புகளால் விலக்கி இவர்கள் மேலும் அம்பெய்தலும், அவன் எய்த அம்புகளைஇவர்கள் விலக்கி அவன்மீதும் படையெறிதலும் ஆக இங்ஙனம் மாறி மாறி என்னும் பொருள் கொள்ளலாம். 'ரகுகுல புதல்வனும்'என்றும் பாடம். (310) 135.-இதுமுதல்ஆறு கவிகள் - அருச்சுனன் பாசுபதத்தைத்தியானித்து அவுணர்மீது எறிய, அவர்கள் சிரங்கள் சிதறியமைகூறும். இப்படைகளினுயி ரழிகிலரிவரென்று அப்படைகளையொழிதரவடலுடையார் மெய்ப்புகும்விறலது விடையவனருளும் கைப்பகழியைமன னுறநனிகருதா. |
இதுமுதல்நான்குகவிகள் - குளகம். (இ-ள்.)'இவர்- இவ்வசுரர்கள், இ படைகளின்-(சாதாரணமான) இந்த அம்புகளினால்,உயிர் அழிகிலர் - இறக்கமாட்டார்கள்,'என்று - என்று (அருச்சுனன்) எண்ணி, அ படைகளைஒழி தர-அந்த அம்புகளைஎய்தல் நீங்க-,அடல் உடையார் மெய் புகும் |