பக்கம் எண் :

206பாரதம்ஆரணிய பருவம்

தங்களை,எதிர் எதிர் - எதிரே எதிரே, தொட - (அசுரர்கள்) தொடுக்க,-
(எ-று.)-'மகபதிமகனும்அவுணரும் பொருதனர்'என வருங் கவியோடு
இயையும்.

     நொடி -இயற்கையில் ஒருவன் ஒருமுறை கையை நொடித்தற்கு
வேண்டும் பொழுது.  பவனன் - அசுரர் எய்யும் அம்புக்கும், சருகு -
அருச்சுனன் எய்யும் அம்புக்கும் உவமை.  சருகு - உலர்ந்த இலை. பரிய
என்றும் பாடம்.                                        (309)

134.-அருச்சுனனுடன்அவுணர் கடும்போர் விளைத்தல்.

வரிசிலைவிறலுடைமகபதிமகனும்
எரிவிழியவுணரு முறைமுறையிகலிப்
பொருதனர்ரகுபதி புதல்வனுமடுபோர்
நிருதருமெதிர்பொரு மமர்நிகரெனவே.

     (இ-ள்.) வரிசிலைவிறல் உடை - கட்டமைந்த
வில்லின்வலிமையையுடைய, மகபதி மகன்உம் - இந்திரகுமாரனான
அருச்சுனனும், எரி விழி அவுணர்உம் - நெருப்பைச் சிந்துகின்ற
கண்களையுடையஅசுரர்களும், முறை முறை - கிரமந்தப்பாமல், இகலி-
பராக்கிரமித்து,-ரகுபதிபுதல்வன்உம் - ரகுகுலத்துக்குத் தலைவனான
தசரதசக்கரவர்த்தியினது திருமகனானஸ்ரீராமபிரானும், அடு போர்
நிருதர்உம் - கொல்லுகின்ற போர்த்தொழிலில் வல்ல இராக்கதர்களும், எதிர்
பொரும் - எதிர்த்துச்செய்த, அமர் - போர், நிகர் என - ஒப்பு என்னும்படி,
பொருதனர் - போர்செய்தார்கள்;

     முறைமுறைஎன்பதற்கு - இவர்விட்ட ஆயுதங்களைஅவன் தான்விடும்
அம்புகளால் விலக்கி இவர்கள் மேலும் அம்பெய்தலும், அவன் எய்த
அம்புகளைஇவர்கள் விலக்கி அவன்மீதும் படையெறிதலும் ஆக இங்ஙனம்
மாறி மாறி என்னும் பொருள் கொள்ளலாம். 'ரகுகுல புதல்வனும்'என்றும்
பாடம்.                                                    (310)

135.-இதுமுதல்ஆறு கவிகள் - அருச்சுனன்
பாசுபதத்தைத்தியானித்து அவுணர்மீது எறிய, அவர்கள்
சிரங்கள் சிதறியமைகூறும்.

இப்படைகளினுயி ரழிகிலரிவரென்று
அப்படைகளையொழிதரவடலுடையார்
மெய்ப்புகும்விறலது விடையவனருளும்
கைப்பகழியைமன னுறநனிகருதா.

இதுமுதல்நான்குகவிகள் - குளகம்.

     (இ-ள்.)'இவர்- இவ்வசுரர்கள், இ படைகளின்-(சாதாரணமான) இந்த
அம்புகளினால்,உயிர் அழிகிலர் - இறக்கமாட்டார்கள்,'என்று - என்று
(அருச்சுனன்) எண்ணி, அ படைகளைஒழி தர-அந்த அம்புகளைஎய்தல்
நீங்க-,அடல் உடையார் மெய் புகும்