விறலது -வலிமையையுடைய அப்பகைவர்களது உடம்பில் உருவச்சென்று தொழில்செய்யும் வலிமையையுடையதாகிய, விடையவன் அருளும்-(முன்னே தனக்குச்) சிவபிரான் அளித்த, கை பகழியை - கையில் வரச் சித்தமாகவுள்ள அஸ்திரத்தை, மனன் உற-மனம்பொருந்த, நனி கருதா - மிகுதியாகத் தியானித்து,-(எ-று.)மகிழா என மேலே இயையும். அடல் உடையார்என்பதற்கு - தங்கள் வலிமை யொழியாதவர் என்று முரைக்கலாம். விடையவன் - ருஷபத்தை வாகனமுங் கொடியுமாகவுடையவன்: அவனருளும் பகழி - பாசுபதம். வைப்பகழி யென்னும் பாடத்துக்கு, கூர்மையுடைய அம்பென்க. ஒழி தரக் கருதா என்க. (311) 136. | முச்சிரமுடையது மூவிருதிரடோள் அச்சிரமுடனெதி ரழல்பொழிதறுகண் நச்சரவனையதுநகமிறுமுனைவாய் வச்சிரமனையதுவருதலுமகிழா. |
(இ-ள்.)(தியானித்தமாத்திரத்தில்), மு சிரம் உடையது - மூன்று தலைகளையுடையதும்,மூ இரு திரள் தோள் - திரண்டுள்ள ஆறு தோள்களையுடைய,அச்சிரமுடன் - உடம்புடனே, எதிர்-காணப்படுகிற, அழல் பொழி தறுகண் நஞ்சு அரவு அனையது- நெருப்பைச் சொரிகின்ற அஞ்சாமைதோன்றுகிற கொடுங் கண்களையும்விஷத்தையுமுடைய பாம்பை யொத்ததும், நகம் இறும்-மலைகள்அறுபடுதற்குக் காரணமான, முனைவாய் - கூர்மையையுடைய நுனியைக்கொண்ட, வச்சிரம்-வச்சிராயுதத்தை, அனையது-ஒத்ததுமாகியஅப்பாசுபதாஸ்திரம், வருதலும் - முன்னே வந்த வளவில், மகிழா - (அருச்சுனன்) மகிழ்ச்சியடைந்து,-(எ-று.)-பரவி விட என்க. நெடுங்காலம்நிலைத்துவாழாமல்விரைவில் அழிதல்பற்றி உடம்பிற்கு அசிரம் என்று பெயர்: ந+சிரம்=அசிரம்: வடமொழிச்சந்தி;ந - எதிர்மறையுணர்த்தும்:சிரம் - வெகுகாலம். இங்கே, அசிரமென்பது - எதுகைப்பொருத்தம் நோக்கி 'அச்சிரம்'என விரித்தல் விகாரம்பெற்றது; இனி, நிலையற்றதென்றபொருளதான அஸ்திரம் என்பதன் திரிபு எனினுமாம். நச்சரவு - தவறாமற்கொல்லுதற்கும், வச்சிரம்-கூர்மை வலிமைகளுக்கும் உவமை. வச்சிரம்-இந்திரனாயுதம். முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள் போலச் சிறகுகளுடையனவாகி அவற்றாற்பறந்துதிரிந்து பலவூர்களின்மீதும் உட்கார்ந்து ஆங்காங்குள்ள உயிர்களைஅழித்துவர, அதனைஅறிந்த தேவேந்திரன் சினந்து சென்று, தனது வச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளைஅறுத்துத் தள்ளிவிட்டானென்பது கதை யாதலால், வச்சிரத்துக்கு 'நகமிறுமுனைவாய்' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது. நகம் - நடவாதது என மலைக்குக்காரணக்குறி. 'அச்சுரமுடன்'என்றும் பாடம். (312) |