(இ-ள்.) அறுகுறை-தலையற்றஉடற்குறைகள், அலகைகளுடன்- பேய்களுடனே, நின்று-ஒக்கநின்று, ஆடின-ஆனந்தக்கூத்தாடின: உகு குருதியின் நீர்-(இறந்த உடம்புகளினின்று) பெருகுகின்ற இரத்த வெள்ளங்கள், திசை தொறுஉம்-எல்லாத்திக்குக்களிலும், ஓடின-பெருகின; பிணம் மலை-மலைபோன்றபிணக்குவியல்கள், நிரை நிரை - வரிசை வரிசையாக, நீடின-உயர்ந்தன;(அவ்வுயர்ச்சியினால்),கதிர்கள்உம்- (சூரியசந்திரர்முதலிய) சோதிகளும், மிசை வழி செல - ஆகாயமார்க்கத்திற் செல்லுதற்கு, நெறி-வழியை, போய்-மேலே சென்று, தேடின-;(எ-று.) அறுகுறை-கபந்தம். கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற வீரர்களது உடம்புகள் தலையறுபட்டபின்பும்பதைபதைத்துக் கைகால்கள் துடிப்பனவற்றை 'ஆடினவறுகுறை'என்றார். பிணங்களைத்தின்னும் பொருட்டு வந்த பேய் கூட்டங்கள் தமக்கு மிகுந்த இரை இங்குக் கிடைத்ததென்று களித்து நர்த்தனஞ்செய்தலால், 'அலகைகளுடனின்று' எனப்பட்டது. பின்னிரண்டடி-உயர்வுநவிற்சி. (317) 142.-அருச்சுனனதுசிலைவலிகண்டுமாதலி அவனை வணங்குதல். மாதவமிகுதிற லசுரரைமறலிக்கு ஓதனமிடுமவ னொருசிலைவலிகண்டு ஆதபனருணனி லணிகிளருயர்தேர்ச் சூதனும்விசயன திணையடிதொழுதான். |
(இ-ள்.) மாதவம்-பெரிய தவத்துடனே, மிகு திறல்-மிக்க வலிமையையுமுடைய, அசுரரை - அசுரர்களை,மறலிக்கு - யமனுக்கு, ஓதனம் இடும் அவன் - விருந்துணவாகக் கொடுத்து வருகின்ற அருச்சுனனது, ஒரு சிலைவலி - ஒப்பற்ற வில்லினது வலிமையை, கண்டு - பார்த்து,-ஆதபன்அருணனில் - சூரியனது சாரதியாகிய அருணன்போல, அணி கிளர் - அழகுமிக்க, உயர் தேர் சூதன்உம் - உயர்ந்த தேரின் பாகனானமாதலியும், விசயனது இணைஅடி தொழுதான் - அவ்வருச்சுனனது இரண்டு பாதங்களிலும் விழுந்து வணங்கினான்;(எ-று.) மறலிக்குஓதனமிடுதல் - கொன்று யமலோகத்திற்கு அனுப்புதல். ஓதனம் - சோறு. ஆதபன் - நன்றாகத்தபிப்பவன். அருணனில், இல் - ஐந்தனுருபு. ஒப்புப்பொருளது. கண்டு தொழுதான் என இயையும். (318) 143.-அருச்சுனனால்தமதுபகை நீங்கினமைகண்டு தேவர் அகமகிழ்தல். தள்ளினர்தமதுயர் சலமினியிலதென்று உள்ளினர்விசயன துறுதியுமுரனும் |
|