இதுமுதற்பதினெட்டுக் கவிகள்-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற அறுசீராசிரிய விருத்தங்கள். (320) 145.-அருச்சுனன்வில்லினின்று நாணியைக் கழற்றி இளைப்பாறியிருத்தல். வாணகைதளவம்வாங்கு மவுணர்தம்மகளிர்தெய்வப் பூணொடுகுழைகள்வாங்கப்புனைவயவாகைவாங்கும் நாணுயர்தனுவின்வாங்கி நயந்திளைப்பாறிநின்றான் தூணொடுபறம்புவாங்குஞ்சுடர்மணிக்கடகத்தோளான். |
(இ-ள்.) தூணொடு- தூண்களையும்,பறம்பு - மலைகளையும், வாங்கும்-ஒக்கின்ற, சுடர் மணி கடகம் தோளான்-விளங்குகின்ற இரத்தினங்களைப்பதித்த கடகமென்னும் அணியை யணிந்த தோள்களையுடையஅருச்சுனன், - வாள் நகை - (தமது) ஒளியையுடைய பற்களுக்கு, தளவம்-முல்லையரும்புகளும், வாங்கும்-தோற்கும்படியான, அவுணர்தம் மகளிர் - அசுரப் பெண்கள், தெய்வம் பூணொடு- தெய்வத்தன்மையையுடைய [சிறந்த]ஆபரணத்துடனே, குழைகள்- காதணிகளையும்,வாங்க-கழற்றிவிடும்படி, புனைவயம் வாகை வாங்கும்- அணிதற்குரிய வெற்றியைக் குறிக்கின்ற வாகைப் பூமாலையைச்சூடிய, உயர் தனுவின் - உயர்ந்த வில்லினின்றும், நாண்-நாணியை, வாங்கி-இறக்கிவிட்டு, நயந்து-மகிழ்ந்து, இளைப்புஆறி நின்றான்- (தேரினின்று இறங்கிச்) சற்றுச் சிரமம் தீர்ந்து நின்றான்;(எ-று.) தளவு-அரும்புக்குமுதலாகுபெயர்: அம்-சாரியை. பல்லுக்கு முல்லையரும்புஉவமை - வெண்மைக்கும், அழகுக்கு மென்க. 'வாணகை தளவம் வாங்கும்'என்னும் அடைமொழி, அசுரமாதரது இயற்கையழகை விளக்கி நின்றது. தெய்வப்பூண் - விசுவகருமன் மயன் முதலிய தேவத்தச்சர்களால் நிருமிக்கப்பட்ட ஆபரணம்: தெய்வப்பூண் வாங்க - மாங்கலியத்தை யிழக்க வென்றபடியுமாம். கணவனையிழந்தவர் காதோலை நீக்க வேண்டுமென்பது, நூற்றுணிபு. மாங்கலியத்தை நீக்குதல் பிற்காலமரபு. ஈற்றடியில், வாங்கும்-உவமவுருபு: "பாம்புருவடங்கவாங்கிய நுசுப்பின்" என்ற விடத்துப் போல. பறம்பு-சிறப்புப்பெயர் பொதுப்பொருளில் வந்த தென்னலாம்: பாரியென்ற வள்ளலின் மலை,பறம்பு எனப் பெயர் பெறும். (321) 146.-அருச்சுனனாற்கொல்லப்பட்ட அவுணரைப் பற்றிய கவிக்கூற்று. பார்கொண்டதசுரர்மெய்யிற் பரந்தசெங்குருதிவெள்ளம் கார்கொண்டவிசும்புகொண்ட தவர்பிணக்காயம்வானோர் ஊர்கொண்டதுரிமையோடு மவருயிர்மீண்டுமென்றால் தார்கொண்டவமரர்க்கெவ்வா றிவன்பகைதடிந்ததம்மா. |
|