எங்குஉம் துன்னி -எவ்வெவ்விடத்தும் நெருங்கி, நின்று - நிலைநின்று, ஆர்ப்ப - ஆரவாரிக்கவும்,-தெய்வம்முனிவரர் - தெய்வத்தன்மையையுடைய சிறந்த இருடிமார், பன்ன அரு மறைகள்- சொல்லுதற்கு அருமையான வேதமந்திரங்களை,பகர்ந்து - சொல்லி, வாழ்த்த - ஆசீர்வதிக்கவும்,-வாசவன்- இந்திரன், மன்னவர் மன்னன் தன்னை- அரசர்கட்குட் சிறந்தவனானஅருச்சுனனை,தழுவிக்கொள்ளா - அணைத்துக்கொண்டு,-(எ-று.)-'கடகரிப்பிடரின்வைத்து'என வருங் கவியோடியையும். கின்னரமிதுனம்- ஒரு தேவசாதி; இதனை,"நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனுந் தந்தம் வீணைமறந்து, கின்னரமிதுனங்களுந் தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே"எனப் பெரியார் பணித்ததனாலும்அறிக. கின்னரங் கொண்டு பாடி ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று பிரியாது திரிதலாலே கின்னரமிதுனமெனப் பெயர்; மிதுனம்-ஆணும் பெண்ணுமான இரட்டை. (325) 150.-யானைப்பிடரில்வைத்து அருச்சுனனை ஊர்வலஞ்செய்ய, ஒருவிஞ்சையன் 'மானுடனுக்குஇது தகுமோ?'எனல். கையுடைக்கயிலையன்னகடகரிப்பிடரின்வைத்து மையுடைக்கொண்டல்வாக னகர்வலஞ்செய்தபோதின் மெய்யுடைக்கலைகள்வல்லான்விஞ்சையனொருவன்கண்டு[றான். பொய்யுடைத்தலத்தோர்க்கின்ன பொறுக்குமோபுனிதவென் |
(இ-ள்.) மைஉடை கொண்டல் வாகன் - கருமை நிறத்தையுடைய மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன், கை உடை கயிலைஅன்ன - துதிக்கையையுடைய கைலாசகிரியையொத்த, கடம் கரி - (ஐராவதமென்னும்) மதயானையினது,பிடரின் - பிடரியின்மேலே, வைத்து - (அருச்சுனனை) வீற்றிருக்கச் செய்து, நகர் வலம் செய்த போதின்-அமரவாதிப் பட்டணத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வந்தபொழுதில்,-மெய்உடை கலைகள் வல்லான் - உண்மைப்பொருள்களையுடையசாஸ்திரங்களில் வல்லவனாகிய, விஞ்சையன் ஒருவன் - வித்யாதரனொருத்தன்,கண்டு - (அதனைப்) பார்த்து, (பொறுக்காமல் இந்திரனைநோக்கி),'புனித-பரிசுத்த குணங்களையுடையவனே!பொய் உடை தலத்தோர்க்கு- நிலையில்லாமையையுடையபூலோகத்திலுள்ளவர்களுக்கு, இன்ன- இப்படிப்பட்ட சிறப்புக்கள், பொறுக்கும்ஓ - தகுமோ? [தகா],'என்றான்- என்று சொன்னான்;(எ-று.) கையுடைக்கயிலைஎன்றது - இல்பொருளுவமை. பிறமலைகளைக் கூறாமற்கயிலையைஉவமை கூறியது, ஐராவதத்தினது வெண்மை நிறத்தை விளக்க. கயிலையன்னகரி என்றது, இந்திரன் யானைக்குக்குறிப்பு, விஞ்சை-வித்யா. (326) |