பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்221

னும்ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படுகிற ஸ்பரிசம் ரசம் ரூபம் கந்தம்
சப்தம் என்னும் ஐவகை) மென்மைகளையுமுடைய,போகம்-
சுகானுபவத்திற்குஉரிய, தெய்வம் மாதர் - தெய்வப்பெண்கள், ஐந்தொடு
ஆயிரர்உம்-ஐயாயிரம்பேரையும், வேறு ஓர் அம்பொன் மாளிகைஉம்-
அழகிய பொன்னினாலாகியதொருவேறு தனி வீட்டையும், ஈந்தான் -
(அருச்சுனனுக்குக்) கொடுத்தான்;

    தெய்வமாதர்-தேவஸ்திரீகள்.  போகமாதர் - பொதுமகளிர்;போகம்-
கலவிச்சிற்றின்பம்.  "சாயல்மென்மை"என்னுந்தொல்காப்பியச் சூத்திரவுரையைக்
கொண்டு, மென்மையென்பது சுவையொளியூறோசைநாற்றமென்னும்
ஐவகையையும் உணர்த்து மென அறிக.                         (335)

160.-இங்ஙன் அருச்சுனனுக்குத் தந்தபின் தேவேந்திரன்
உரோமசரிடத்துஅருச்சுனன் பெருமையைக் கூறல்.

வரோதயமானதெய்வ வான்படைமறைகள்பின்னும்
புரோசனப்பகைவற்கீந்து புரந்தரனிருந்தபின்னர்ச்
சரோருகரண்டம்விண்டா லொருமயிர்சலிக்குஞ்செங்கை
உரோமசமுனியைநோக்கி யுரைத்தனனுற்றவெல்லாம்.

     (இ - ள்.)புரந்தரன் - இந்திரன்,-வர உதயம் ஆன-சிறந்த
உற்பத்திக்கிரமத்தையுடையவையாகிய, தெய்வம் -
தெய்வத்தன்மையையுடைய, வான்-சிறந்த, படை-ஆயுதங்களையும்,மறைகள்
- மந்திரங்களையும்,பின்னும் - மீண்டும், புரோசனன் பகைவற்கு -
புரோசனன் என்பவனுக்கு பகைவனாகியஅருச்சுனனுக்கு, ஈந்து-கொடுத்து,
இருந்த பின்னர்-வீற்றிருந்தபின்பு,-சரோருகர் அண்டம் விண்டால்-
பிரமதேவர் படைத்த அண்டகோளம் ஒருகால் அழிந்தால், ஒருமயிர்
சலிக்கும்-ஒருமயிர் உதிர்கின்ற, செம் கை- சிவந்த கையையுடைய,
உரோமசமுனியை நோக்கி - ரோமசர் என்னும் ரிஷியைப் பார்த்து, உற்ற
எல்லாம் - நடந்த செய்கைகளையெல்லாம்,உரைத்தனன்-சொன்னான்;
(எ -று.)

    வரோதயம்-குணசந்திபெற்ற வடமொழிப்புணர்ச்சி.  உதயம் -
உதித்தல்;தோற்றம். கீழ் ஐந்தாங்கவியில் "தெவ்வையடுந்திறற்படையு
நல்கி"என்றதனைநோக்கி, இங்கே 'பின்னும்ஈந்து'என்றார். புரோசனன்
என்பவன் - திருதராஷ்டிரனது மந்திரி:இவன், வாரணாவதமென்னும்
நகரத்தில் அரக்கினாற்செய்து பாண்டவர்களுக்கு இடமாகக்
கொடுக்கப்பட்ட மாளிகையில் அவர்களுக்குத் துணையாகத்
துரியோதனனால்அனுப்பிவைக்கப்பட்டவன்:
இவன் தனது எசமானனது
கட்டளைப்படி,பாண்டவர்களும் குந்திதேவியும் தூங்குகின்ற சமயத்தில்
அவ்வீட்டில் நெருப்புப் பற்றவைத்து அவர்களையெரித்து அழித்து
விடுவதற்கு இருந்தான்:அவ்வஞ்சனையைவிதுரராலறிந்து பீமசேனன்
ஒருநாளிரவில் அந்தப்புரோசனன் முதலியோர் தூங்குகையில்
தீப்பற்றவைத்துவிட்டுத் தாயையும் உடன்பிறந்தவர்களையும்
எடுத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாய்த் தப்பி வெளிச்சென்றான்.