பக்கம் எண் :

232பாரதம்ஆரணிய பருவம்

     இந்திரனுக்குமேகத்தை வாகனமாகக் கூறுதல், புராணங்களின்
கொள்கை.  முடி என்பது, மயிர்முடியப்படுவதென்னுங் காரணம்பற்றித்
தலைக்கும்,அதிலணியப்படுதல்பற்றி ஆகுபெயராய்க் கிரீடத்துக்கும்
பெயராம். இங்கே, முடி - கிரீடம்.  வனசம்-வநஜம்;நீரிற் பிறப்பதென்று
காரணக்குறி.  வியாசபாரதத்தில் இம்மலரைக் குறிக்குமிடத்து 'ஸௌகந்திகம்'
என்றும், 'பத்மம்'என்றும் கூறப்பட்டுள்ளது: இத்தொடர்கட்கு -
தாமரையினத்தைச் சேர்ந்த செங்கழுநீர் மலரென்று ஒரு சாராரும்,
நல்லமணமுடைய தாமரையென்று மற்றொருசாராரும் பொருள்
கூறுகின்றனர்.  ஆதலால், இப்பாடலிலுள்ள வனசம் என்பதற்குத்
தாமரையென்று பிரசித்தமாயுள்ள பொருளைவிட்டு,124, 125-ஆம்
பாடல்களால் முறையே  "பொற்றருநண்பின் வழங்கி"என்றும், "அண்ணற்
றருப்பெற்ற பின்"என்றும் வருவதற்கு ஏற்ப, 'வனசம்- வனத்திலுண்டாகும்
கேட்டுப்பூ'என்று பொருளுரைத்தல் சிறவாதெனத் தோன்றுகின்றது;
இந்நூலில் 84-ஆம் பாடலில் "கந்தவான்பொழிலும்
நன்னீர்க்கடிமலர்த்தடமும்"என்று வருவதும், 138-ஆம் பாடலில் "வாவிச்
செழுந்தாமமலர்நல்கி"என்று வருவதும், 'நீர்ப்பூ'என்று கொள்ளவேண்டு
மென்பதனையேவற்புறுத்தும்: ஆதலால், 124, 125-ஆம் பாடல்களிலுள்ள
தரு என்பது - மலர்க்கொடியையே காட்டுமென்று கொள்ளுதலே ஏற்கு
மென்க.  கனகமுடிமேல் வனச மலர் என்பதற்கு - சுவர்க்கலோகத்திலுள்ள
பூப்போன்ற பூஎன்று கருத்துக்கொள்ளினுமாம்.  மை முகில் வாகனன் கனக
முடிமேல் வனசம் என்பது - இந்திரனது முடிமேலுள்ள வனசம் என்றவாறு.
மயில் - ஆகுபெயர்.  முன் - இடமுன்.  செய்ய - குறிப்புப் பெயரெச்சம்.(348)

12.-அம்மலரைக்கண்டுமனத்தினாற்போற்றியதிரௌபதி
வீமனுக்குக் காட்டிச்சொல்லலுறுதல்.

இந்தமலருலகனைத்துமீன்றகோலவெழின்மலரோவிரவிதிருக்
                                கரத்தில்வைகும்,
அந்தமலரோவமுதிற்பிறந்தபாவை யமர்ந்துறையு
                          மணிமலரோவவனிதன்னில்,
எந்தமலருங்கருகக்கமழாநின்ற தெங்கெங்குமிதன்
                            மணமேயென்றுபோற்றிக்,
கந்தவகன்மைந்தனுக்குக்கன லோனல்குங் கனங்குழைசென்று
                       வகையுடன்காட்டிச்சொல்வாள்.

     (இ-ள்.)'இந்தமலர்-,உலகு அனைத்துஉம்ஈன்ற கோலம் எழில்
மலர் ஓ - உலகமுழுவதையும் உண்டாக்கிய மிக அழகிய (திருமாலின்
நாபித்) தாமரைமலரோ?  இரவி திரு கரத்தில் வைகும் அந்த மலர் ஓ -
சூரியனுடைய கையிலிருக்கின்ற அந்த மலர்தானோ? அமுதின் பிறந்த
பாவை அமர்ந்து உறையும் அணி மலர் ஓ-திருப்பாற்கடலில் தோன்றிய
திருமகள் மனம் விரும்பி வாழ்கின்ற அழகிய அந்த மலர்தானோ? அவனி
தன்னில் - பூமியிலேயுள்ள, எந்த மலர்உம் - எந்த தாமரைப்பூவும், கருக -
(தனக்கு முன்னே) கருகித் தோன்றும்படி, எங்கு எங்குஉம் -
எல்லாவிடத்தும், இதன் மணம்ஏ கமழாநின்றது-இந்த மலரின் நறுமணமே
வீசாநின்றது',