என்று போற்றி -என்று (அதன் நறுமணங் குறித்துச் சிந்தித்துக்) கொண்டாடி,-கனலோன்நல்கும் கனம்குழை-அக்கினியினால் தரப்பெற்றவளும் பொற்குழையுடையவளுமான திரௌபதி,-உவகையுடன் சென்று - (அபூர்வமான மலரைக்கண்டதனாலான)வியப்புடனே போய், கந்தவகன் மைந்தனுக்கு - காற்றின் குமாரனானவீமசேனனுக்கு, காட்டி - (அம்மலரைக்) காட்டி, சொல்வாள்-(பின்வருமாறு) கூறுபவளானாள்;(எ-று.)- அதனைமேற்கவியிற் காண்க. சிறப்புற்றதிருமாலினுந்தித்தாமரை, செங்கதிரோன்கரத்துத் தாமரை, திருமகளுறையுந்தாமரை என்ற இவைகள் தெய்த்தாமரைமலர்களாதலால், திரௌபதி தன்முன்வீழ்ந்த வனசமலரை, அவற்றோடொக்குமென்று கருதினாள். 'எந்தமலருங்கருக'என்றதனால்,இந்த மலரின் நறுமணத்துக்குமுன் மற்றை மலரின் மணம் கருகித் தோன்றுமென்று இலக்கணைவழக்காகக்கூறியதென்க: இனி, அம்மலரின் செந்நிறத்தைக் குறித்தபடியுமாம். அமுது-பாற்கடலுக்கு, இலக்கணை.கந்தவ்ஹன்- நறுமணத்தைத்தாங்குபவன்: காற்றுக்குக் காரணக்குறி. கனங்குழை- அன்மொழித்தொகை. (349) 13.-திரௌபதிஇதையொத்தமலரைத்தருக என்று வீமன் கையிற் கொடுக்க,அவன் அதுகுறித்து உரோமசனை வினவுதல். இம்மலருக்கொருமலருமவனிதன்னி லெதிரில்லையென்றிதழா யிரத்தின்மிக்க, அம்மலரைக்கைம்மலரிற்கொடுத்தீதொக்கு மணி மலர்நீயெனக்கருளவேண்டுமென்னச், செம்மலையிற்றிகழ்சிகரத்திண்டோள்வீமன் றெய்வமுனி புங்கவன்றன்றிருத்தாள்போற்றி, மெய்ம் மலரைத்திருமுன்புவைத்துநின்றுவினவினானவனு மெதிர்விளம்புவானே. |
(இ-ள்.) இமலருக்கு ஒரு மலர்உம் அவனிதன்னில் எதிர் இல்லை என்று - 'இந்தப்பூவுக்குஒரு பூவும் பூமியிலே ஒப்பானது இல்லை'என்று கூறி, இதழ் ஆயிரத்தின் மிக்க அ மலரை கை மலரில் கொடுத்து - ஆயிரமிதழ்களோடு கூடிச் சிறந்த அந்தப்பூவை (வீமசேனனது) செந்தாமரைமலர்போலுங் கையிலே கொடுத்து, ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருளவேண்டும் என்ன - 'இம்மலரையொத்தஅழகிய மலரை நீ எனக்குக் கருணைசெய்துகொடுக்கவேண்டும்'என்று (திரௌபதி) பிரார்த்திக்க,-செம்மலையின்திகழ் சிகரம் திண் தோள் - அழகியதொரு மலையிலேவிளங்குகிற கொடுமுடிபோன்று வலிய தோள்களையுடைய, வீமன்-வீமசேனன், தெய்வம் முனிபுங்கவன்தன் திரு தாள்போற்றி- தெய்வத்தன்மையையுடைய அந்த உரோமசனென்ற இருடிச்சிரேஷ்டனது திருவடிகளைவணங்கி, மெய் மலரை திரு முன்பு வைத்து நின்று - உண்மையான அந்தமலரை (அம்முனிவனது) சந்நிதனத்திலே வைத்துவிட்டு நின்றுகொண்டு, வினவினான்- ('இதன்வரலாறு யாது?'என) அவனைக் கேட்டான்;அவன்உம் எதிர் |