விளம்புவான் -அம்முனிவனும் (அவ்வினாவுக்கு)விடை கூறுபவனானான்; (எ-று.)-அதனைமேலே காண்க. உலகமெங்கும்அகப்படாத இந்த மலரின் சிறப்பை நோக்குமிடத்து 'இதுமாயையினாலாகியமலரோ?'என்று ஐயங்கொள்ள இடமுண்டாதலின், அதனையொழித்தற்கு'மெய்ம்மலர்'என்றான்: மலரென்றால்இதுவே மலர், மற்றையவை மலரல்லவென்னும் பொருளும் இத்தொடரில் தோன்றும். அம்மலர் என எடுத்து, அழகிய பூவென்றுங் கொள்ளலுமாம். செம்மலையென்பதை-செம்பொன் மலையெனக்கொள்வாருமுளர். அவனி - அவநி: மன்னவராற் பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும் வடசொல். புங்கவன் என்பதற்கு - ஆண்பசு [எருது]போன்றவனென்று பொருள்: சிங்கம், புலி, யானை,காளைஇச்சொற்கள் மனிதனுக்கு வரும்போது சிறப்புப்பொருளையுணர்த்துதல், மரபு. (350) 14.-உரோமசன்அம்மலரைப்பற்றிக் கூறுதல். என்பலவுமியாமுரைப்பதிந்தப்பூவினியல்பினையும் பெருமையையுமியக்கர்தங்கண், மன்பதியிலுளதன்றிவரம்பிலாத வானுலகிலுள தென்னின்மற்றுமுண்டோ, உன்பிறருக்கிதுகோடற்கெளிதோமாயனும்பர்பதிபுகுந்தொரு பைந்தோகைக்கீந்த, பின்பிதனைக்கண்டறிவாரில்லையென்றுபேசினான் யாவரொடும்பேச்சிலாதான். |
(இ-ள்.) யாம்-,இந்த பூவின்-,இயல்பினையும்-,பெருமையையும்-, பலஉம் - பலபடியாக, என்உரைப்பது-?(இப்பூ),-இயக்கர்தங்கள் மன்பதியில் - யட்சர்கட்குத் தலைவனானகுபேரனுடைய நகரான அளகையிலே, உளது-;அன்றி - அல்லாமல், வரம்பு இலாத - (சிறந்த பொருள்களில் இன்னதுதான் உள்ளது என்று) வரையறுத்துச் சொல்லமுடியாத, வான் உலகில் - தேவலோகத்தில், உளது - கிடைப்பதாகும்;என்னின் - இவ்வாறானால்,மற்றுஉம் உண்டுஓ - மேலும் சொல்லவேண்டுவது உண்டோ? உன் பிறருக்கு - உன்னைக்காட்டிலும் வேறுபட்டவர்க்கு, இது-இம்மலர், கோடற்கு-கொண்டு வருதற்கு, எளிதுஓ- எளிதாகுமோ? மாயன்-ஸ்ரீக்ருஷ்ணபகவான், உம்பர்பதிபுகுந்து- தேவலோகத்திலே புகுந்து, ஒரு பைந் தோகைக்கு - ஒப்பற்ற இளைய மயில்போன்ற சாயலையுடையளானசத்தியபாமைக்கு, ஈந்த- (பாரிசாதமரத்தையே) தந்த, பின்பு-,இதனை- இதுபோன்ற சிறந்த புஷ்பத்தை, கண்டு அறிவார் இல்லை-,என்று-,பேசினான்- கூறினான்: (யாவனென்னின்),-யாவரொடுஉம் பேச்சு இலாதான் - எவரோடும் பேசுதலில்லாத உரோமசமுனிவன்;(எ-று.) இதனால்,இந்தப்பூ அளகையிலுள்ள தென்றும், உன்னாற்கொள்ள முடியுமென்றும், இது வானுலகத்திலுள்ள தெய்வப்பூவோடொப்பது என்றும் கூறியவாறாயிற்று: முதலில் இயக்கர் தங்கள் பதியிலுள்ளது என்றுகூறி, பிறகு 'வானுலகிலுள்ள'என்று கூறினான். இதனால்,'கிடைப்பதற்குஅரிய இந்தப்பூப்போன்ற |