பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்241

போல் அனுமானது வலியபெரியதோள்கள் போர்க்கடலைக் கலக்கியதென்பார்
'மந்தராசலமனையதோள்'என்றார். மாருதி - மாருதனது மகனென்று
பொருள்;மாருதன் - வாயுதேவன்.  கேசரி யென்னும் வானரவீரனது
மனைவியானஅஞ்சநாதேவியினிடத்து வாயுதேவனுக்குப் பிறந்தவன்
அநுமானென்க: இப்பெயர் - பீமசேனனுக்கும்  வழங்கும். வீமனது
தோள்வலிமை அநுமானது வடிவத்தைக்கண்ட மாத்திரத்தில் இனி
அடங்குதலால், அதற்கு, அகத்தியரது வடிவத்தைக் கண்டமாத்திரத்தில்
அடங்கிய விந்திய மலையைஉவமை கூறினாரென்க;இல்லாவிட்டால்,
புயாசலம் என வலிமைக்கு உவமை கூறுதலோடு 'விந்தமன்ன'என்ற
உவமையுங் கூறியதற்குப் பயனின்றாம். இனி, விந்தாசலம் அன்ன
திண்புயம் வீமன் என மொழி மாற்றினுமாம்.

     இதுமுதல்இருபத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் முதற் சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய
கலிநிலைத்துறைகள்.                                      (358)

22.வெற்பிரண்டினில்வேலைமுன்கடந்ததாணீட்டிப்
பொற்புயாசலமிரண்டையு மிருவரைபோக்கி
அற்பவாழ்வுடையரக்கன்மா நகரழலூட்டும்
சிற்பவாலதிதிசையெலாஞ் சென்றுநின்றோங்க.

     (இ-ள்.)வெற்பு இரண்டினில் - இரண்டுமலைகளிலே,முன்-(இராம
தூதனாகஇலங்கையிற்சென்ற) முற்காலத்தில், வேலைகடந்த - கடலைக்
கடந்த, தாள் - பாதங்களை,நீட்டி-,பொன் புயாசலம் இரண்டைஉம் -
பொன்போலழகிய மலைபோன்றகைகளிரண்டையும், இரு வரை போக்கி -
இரண்டுமலைகளிலேசெலுத்தி, அற்பம் வாழ்வுஉடை - அற்பமான
வாழ்க்கையையுடைய, அரக்கன் - இராவணனுடைய, மா நகர் - பெரிய
நகரை, அழல் ஊட்டும்-அழலையுண்ணுமாறு[எரிக்குமாறு]செய்த, சிற்பம் -
தொழில்செய்வதில் திறமையுள்ள, வாலதி - (தன்) வால், திசைஎலாம் -
திக்குகளிலெல்லாம், சென்று - போய், நின்று இருந்து, ஓங்க-ஓங்கா நிற்க,-
(எ-று.)-'இருந்தனன்'என மேற்கவியில் முடியும்.

     இதனால்,அப்போது பேருருவுகொண்டிருந்தனன் அநுமான் என்பது,
பெறப்படும்.  இவன் இராமதூதனாய்இலங்கைபுக்கு அந்நகரையெரியூட்டியமை
பிரசித்தம். சிற்பம்-சிறுமை என்றாருமுளர்.                        (359)

23.எம்பிரான்றனக்கொழியவே றியாவர்க்குந்தெரியாச்
செம்பொன்மாமணிக்குண்டல மிருபுறந்திகழ
விம்பமால்வரைமீதொரு மேருவேயொக்கும்
அம்பொன்மால்வரையிருந்தென விருந்தனனனுமான்.

     (இ-ள்.)எம்பிரான் தனக்கு ஒழிய-நமக்கெல்லாந் தலைவரான
திருமாலொருவருக்கே யல்லாமல், வேறு யாவர்க்குஉம் தெரியா - வேறு
ஒருவர்க்கும் கட்புலப்படாத [தெய்வத்தன்மையுடைய],செம்பொன் மா மணி
குண்டலம்-சிவந்த பொன்னாலாகியசிறந்த இரத்தி