பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்247

னானஇராவணனுடையஊரை, அழல் ஊட்டி - நெருப்புக்கு இரையாக்கி,- இ
அகிலம் புரக்கும் நாயகன் தன்னைஓ-இந்தஉலகத்தையெல்லாம்
இடர்தீர்த்துப் பாதுகாப்பவனானஅனைவர்க்குந்தலைவனானஸ்ரீராமனையா,
இழித்து-(ஒருமனிதனென்று) தாழ்மையாக, நீ புகல்வாய்-நீ சொல்லுவாய்?
(எ-று.)

    ரட்சணகர்த்தாவாகிய திருமாலே ஸ்ரீராமனாகத்திருவவதரித்து
வந்திருக்கையில் அப்பிரானைச்சாதாரணமனிதன்போற் பேசுவது இழுக்கு
என்பான் 'அகிலம்புரக்குநாயகன்றன்னையோவிழித்து நீ புகல்வாய்'
என்றான்.                                              (367)

31.பின்னும்வார்சிலையிராகவன்பெருமையுமனுமான்
மன்னுதோளிணைவலிமையுமாருதிசாற்ற
அன்னபோழ்தினிலகமகிழ்ந் தருளுடனோக்கி
என்னகாரியம்வந்ததிங் கியார்கொனீயென்றான்.

     (இ-ள்.)(என்றுகூறி),-பின்உம்- மேலும், வார் சிலைஇராகவன்
பெருமைஉம் - நீண்ட வில்லையேந்தியஸ்ரீராமனுடைய பெருமையையும்,
(அந்த ஸ்ரீராமனைத்தாங்கிய), அனுமான் - அனுமானுடைய, மன்னு -
நிலைபெற்ற,தோள் இணைவலிமைஉம்-இரண்டு தோள்களின்
வலிமையையும், மாருதி-வாயுகுமாரனானவீமசேனன், சாற்ற - சொல்ல,-
அன்னபோழ்தினில்-அப்போது, (அனுமான்), அகம் மகிழ்ந்து-மனஞ்
சந்தோஷித்து, அருளுடன் நோக்கி-(அந்த வீமசேனனைக்)கருணைகொண்டு
கடாட்சித்து, 'இங்குவந்ததுஎன்ன காரியம்-இங்கு வந்தது என்ன
காரியத்தைக் கருதியோ?  நீ யார் கொல்-நீ யாவனோ?'என்றான்-என்று
மீண்டும் வினவினான்.                                     (368)

32.-வீமசேனன்தன்னைஇன்னானென்றுதெரிவித்தல்.

தாமமாருதியுரைத்தசொற் றம்பியுங்கேட்டு
நேமிமாநிலம்புரக்கும்நன் னீதிவேற்றரும
நாமநாயகற்கிளையவனரனுக்குமூத்தோன்
வீமன்வாயுவின்புதல்வன்யா னென்றன்விறலோன்.

     (இ-ள்.)தாமம் மாருதி - ஒளியுடன்கூடிய அநுமான், உரைத்த -
சொன்ன, சொல் - சொல்லை,தம்பிஉம் - அவர் தம்பியாகிய வீமசேனனும்,
கேட்டு-,'நேமிமா நிலம் புரக்கும்-வட்டவடிவாகவுள்ள பெரிய
இந்நிலவுலகத்தைப் பாதுகாக்கின்ற, நல் நீதி - சிறந்த நீதியையுடையனான,
வேல்-வேற்படையையுடைய, தருமன் நாமம் நாயகற்கு - தருமனென்று
பேருள்ள தலைவனுக்கு,இளையவன்- அடுத்த தம்பியாவேன்: நரனுக்கு
மூத்தோன் - அருச்சுனனுக்கு முன்பிறந்தவன்: வீமன் - வீமசேனனென்பது
என் பெயர்: யான் வாயுவின் புதல்வன்-',என்றனன் - என்று
(தன்னைஇன்னானெனத்)தெரிவித்தான்: (யாவனென்னில்),-விறலோன்-
வலிமையை யுடையவனாகியவீமசேனன்;(எ-று.)