பக்கம் எண் :

252பாரதம்ஆரணிய பருவம்

னமையையுட்கொண்டுஇவ்வுவமை கூறினார்போலும், "வேள்குன்ற
சரபத்தைப் பிளந்த சிங்கவேள்குன்றத்தினார்க்கு"என்றார்,பிள்ளைப்
பெருமாளையங்கார். வில்லிபுத்தூரார் வைணவராயினும் பிறன்கோட்கூறலாகச்
சிவபிரானைமேன்மையாகக் கூறுவர்.                             (376)

40.-இதுவும் அடுத்தகவியும்-ஒரு தொடர்:தான் மலரின்
பொருட்டுவந்ததைச்சொல்ல, அநுமான்கூறத்
தொடங்குதல்.

திகந்தமெட்டினுந்தன்மண மொல்லெனச்செல்லச்
சுகந்தபுட்பமொன்றியாமுறை வனத்தினிற்றோன்றத்
தகைந்தவப்புதுமலர்தனைத்தழன்மகள்காணா
வகைந்தவித்துணைமலரெனக்கருளுதியென்றாள்.

     (இ - ள்.)திக் அந்தம் எட்டின்உம்-திக்குகளினெல்லைகளெட்டிலும்,
தன் மணம் ஒல்லென செல்ல - தன் பரிமளம் விரைவாகச் சென்று
பரவும்படி, சுகந்தம் புட்பம் ஒன்று - நல்ல வாசனையுடையதொருமலர்,
யாம் உறை வனத்தினில் தோன்ற - நாங்கள் வசிக்கின்ற காட்டிலே வந்து
காணப்பட, தகைந்த அ புதுமலர் தனை-(காண்பாரதுகண்ணையும்
மனத்தையுந் தன்னிடத்தொழிய வேறிடத்திற் செல்லவொட்டாது) தடுத்திட்ட
அந்தப்புதுமையான பூவை, தழல் மகள் காணா-அக்கினியினிடத்தே
அவதரித்த குமாரியான திரௌபதி கண்டு, வகைந்த இ துணைமலர் எனக்கு
அருளுதி என்றாள்-சிறப்புப்பொருந்தின இத்தன்மையான மலர்களை
எனக்கு (த்தேடிக்கொண்டுவந்து) கொடுத்தருளுவா யென்று (என்னை
நோக்கிக்) கூறினாள்;(எ-று.)

     தகைந்த-பெருமைபெற்ற என உரைத்தலுமாம்:விரிந்த என்று
பொருளுரைப்பாருமுளர்.  நான்காமடியில், அகைந்த என்று பிரித்து, எழுந்த
என்று உரைத்தாருமுளர்.  புதுமலர் - இதுவரை காணப்படாத மலர்:
அதிசயிக்கத்தக்க மலர்.                                  (377)

41. ஆதலாலிவண்யானுமின் றணுகினனென்று
நீதியாலுயர்தம்முனைநெடுந்தகைபோற்றக்
கோதிலாதவக் குரிசிலுங்குமரனைநோக்கித்
தீதிலாயிதுகேட்கெனச் செப்புவன்மாதோ.

     (இ - ள்.)ஆதலால் - ஆகையினால்,இவண் - இவ்விடத்தில்,
இன்று-இப்பொழுது, யான்உம் அணுகினன் - நானும் வந்த சேர்ந்தேன்,
என்று-என்று சொல்லி, நீதியால் உயர்தம்முனை- நியாயத்தாற் சிறந்த
தமையனானஅநுமானை,நெடுந்தகை-பெருமைக்குணமுடைய வீமன்,
போற்ற-துதிக்க,-கோது இலாத அ குரிசில்உம்-குற்றமில்லாத பெருமையிற்
சிறந்த அவ்வனுமானும், குமரனைநோக்கி-இளையவனானவீமனைப்பார்த்து,
தீது இலாய் இது கேட்க என - குற்றமில்லாதவனே! (யான் சொல்லும்)
இவ்வார்த்தையைக் கேட்பாயாக என்றுகூறி, செப்புவன் - (சிலவார்த்தைகள்)
கூறுபவனானான்;(எ-று.)-அதனைஅடுத்த கவிகளிற் காண்க.