(இ-ள்.) யாம்- நாங்கள், நெடிய கானகம் நீங்கி - (காட்டில் வசிக்கவேண்டிய நாட்களையெல்லாம்வசித்துக் கழித்து இந்த) நெடிய காட்டை விட்டுப்போய்,-நெறிஇல் நேரலரை - நன்னெறியிற் செல்லுதலில்லாத (எம்) பகைவரை, கடிய வெம் செரு புரி பெருங் குருதி வெம் களத்தில் - மிகக்கொடிய போரைச் செய்தற்கு இடனானதும்மிக்க இரத்தவெள்ளம் பாயப்பெற்றதுமான கொடிய போர்க்களத்திலே, ஆங்கு - அப்போது, அடிகள் - பெரியோரே! எழுந்தருளிவந்து-,அருச்சுனன் தட தேர் கொடியின்மீது - அருச்சுனனுடைய பெரிய தேரின் கொடிமீது, நின்று-,உவந்து - மகிழ்ந்து, கூத்தாடுதிர் - கூத்தாடுவீராக, என்றான்-என்று (வீமன் அனுமானிடம்) வரம் வேண்டினான்;(எ-று.) நெறியின் -முறைமையாக, செருப்புரி எனினுமாம். (385) 49.-அவ்வரத்தைவீமனுக்கு அனுமான்தர, இலங்கையில் தீயிட்டபோதுகொண்ட உருவத்தைக் காட்டுமாறு வீமன் வேண்டுதல். நீட்டுமவ்வரமவனுக்கு நேர்ந்தனனனுமான் மீட்டுநல்வரமொன்றுமுன் வேண்டினன்வீமன் ஈட்டுமாநிதியிலங்கைதீ யிட்டநாளிசைந்த மோட்டுருத்தனைக்காட்டுகென்றிறைஞ்சினன்முதல்வன். |
(இ-ள்.)நீட்டும்-(வீமன்) கேட்ட, அ வரம் - அந்தவரத்தை, அவனுக்கு - அந்த வீமசேனனுக்கு, அனுமான்-,நேர்ந்தனன்-(தந்ததாக) உடன்பட்டுக் கூறினான்: முதல்வன் - (வீரரில்) மேம்பட்டவனான,வீமன்-, மீட்டுஉம் - மறுபடியும், 'ஈட்டும்- மிகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள, மா நிதி- மிக்க செல்வத்தையுடைய, இலங்கை-இலங்கையிலே, தீ இட்ட நாள் - நெருப்பு வைத்த காலத்தில், இசைந்த - கொண்டிருந்த, மோடு உருதனை- பருத்த உருவத்தை, காட்டுக - காட்டுவாயாக,'என்று-,இறைஞ்சினன் - வணங்கினவனாகி,-நல்வரம் ஒன்று - சிறந்த ஒரு வரத்தை, முன்- அவ்வனுமானெதிரே, வேண்டினன்-;(எ-று.) இறைஞ்சினன் -முற்றெச்சம். காட்டுகென்று - வியங்கோளின் அகரவீறு தொகுத்தல். 'இலங்கைதீயிட்ட நாள்'என்றபோதிலும், கடல்கடந்த வுருவத்தைக் காட்டு என்று வினாவியதாகக்கருத்துக் காணலாம்: அப்போது பேருருக்கொண்டமையே பிரசித்தம். (386) வேறு. 50.-உடனேஅனுமான் திரிவிக்கிரமனைப்போல் பேருருக்கொள்ளுதல். என்றடல்வீம னிசைத்திடு முன்னம் ஒன்றியிவ் வேழுல கங்களு மொன்றாம் மன்றுளதார்புனைவாமன னைப்போல் நின்றுநிமிர்ந்தன னித்தமு முள்ளான். |
|