பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்257

     (இ-ள்.) என்று-,அடல் வீமன் - வலிமையையுடைய வீமசேனன்,
இசைத்திடும் முன்னம்-சொல்லுதற்கு முன்பு [சொன்னவுடனேஎன்றபடி],-
நித்தம்உம்உள்ளான் - எப்போதும் உள்ளவனான[சிரஞ்சீவியாகிய]
அநுமான்,-இஏழ் உலகங்கள்உம் ஒன்றி ஒன்றுஆம் - இந்த
ஏழுலகங்களிலும் பொருந்தி ஒன்றாகவுள்ள,மன்று உள தார் புனை
வாமனனைபோல் - வாசனையுள்ளமாலையையணிந்தவாமனனைப்போல,
நின்று நிமிர்ந்தனன் - எழுந்து நின்று உயரலானான்;(எ-று.)

     மன்று -மன்றல்: மன்றம் எனவும் வரும்.  வாமனன் என்பது
திருமாலின் ஐந்தாமவதாரம்: அவன் மகாபலிபக்கல் சென்று தன் காலடியில்
மூவடிமண் கொடுக்குமாறு அவ்வரசனிடத்து வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகிப்பேருருவெடுத்து மண்ணெல்லாம் ஓரடியாகவும்,
விண்ணெல்லாம் மற்றோரடியாகவும்அளந்து மற்றோரடிமண்கொடுப்பதாக
அந்த மகாபலியைச் சிறைவைத்தானென்ப.  பிரமசாரியான வாமனனுக்குத்
தார் இல்லையாயினும், திருமாலாயிருக்கும் நிலையில்தார் உண்டு என்க.

     இதுமுதல்முப்பத்திரண்டு கவிகள் - பெரும்பாலும் ஒன்று
மூன்றாஞ்சீர்கள்விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கலிவிருத்தங்கள்.                                        (387)

51.-அநுமானதுபெருந்தோற்றம்.

படியினதெல்லைபதத்தினதெல்லை
மடியினதெல்லையவ்வானினதெல்லை
அடியினதெல்லையளப்பரிதென்றான்
முடியினதெல்லை மொழிந்திடலாமோ.

     (இ-ள்.)பதத்தினது - அடிவைப்பினுடைய, எல்லை- பரப்பளவு,-
படியினது எல்லை- பூமியின் பரப்பின் அளவாகும்: மடியினது எல்லை-,
அ வானினது எல்லை- அந்த வானினெல்லையளவாகும்: அடியினது -
காலின், எல்லை-,அளப்பு அரிது - அளத்தற்கு முடியாது, என்றால்-,
முடியினது - சிரசின், எல்லை-,மொழிந்திடல் ஆம்ஓ - சொல்லுதற்கு
முடியுமோ?  (எ-று.)

     பதம் என்றது -நிலத்தில் கால் ஊன்றுகின்ற பகுதி.  அடி என்றது -
உடம்பின் காலில் ஒருகூறாய்,அதனால்கால் என்று வழங்குதற்கு உரியதாய்
முழங்காற்குக் கீழ்ப்பட்டுள்ள பாகம்.  அந்தக்கால் சாதாரணமாகக் கண்ணாற்
காணுதற்கு எளியது: அப்பகுதியே கண்ணாற் காணமுடியாதென்பது
திண்ணமாதலால், முடியினதெல்லையைப்பற்றிச்சொல்லமுடியுமோ?
முடியாதென்கிறார்: தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி.         (388)

52.-அநுமானுடம்பைச்சுற்றிய வாலின் தோற்றம்.

அந்தரமெங்கு மடக்கியமெய்யில்
சுந்தரவாலதி சுற்றியதோற்றம்