முந்தியநீளுடல் வாசுகிமுன்னாள் மந்தரவெற்பை வளைத்ததுமானும். |
(இ-ள்.)அந்தரம் எங்குஉம் அடக்கிய மெய்யில்-ஆகாயத்தினிட முழுவதையும் தன்னதாக்கிக்கொண்ட (அநுமானுடைய) உடம்பிலே, சுந்தரம் வாலதி சுற்றிய தோற்றம் - அழகிய வால் சுற்றிக்கொண்டிருந்த காட்சி,- முன்நாள்-(தேவாசுரர்கள் பாற்கடலைக்கடைந்த) முற்காலத்தில், மந்தரம் வெற்பை - மந்தரமென்ற மலையை,முந்திய வாசுகி நீள் உடல் - விரைவு பொருந்திய வாசுகியின் நீண்ட உடலானது, வளைத்தது- சுற்றிக்கொண்டிருந்ததை, மானும் - ஒக்கும்;(எ-று.) அநுமானுக்குமந்தரமலையும்,அவனுடலைச்சுற்றியவாலுக்கு அந்த மந்தரமலையைச்சுற்றிய வாசுகியினுடலும் உவமையெனக் காண்க. (389) 53.-அநுமானுடலின்வருணனை. நீளகல்வான நெருங்கமருங்கே தோள்புறம்வாலதி சூழ்தரநிற்போன் நாளொடுதாரகை ஞாயிறுமுதலாம் கோளணிசூழ்வரு குன்றமுமொத்தான். |
(இ-ள்.) நீள்அகல் வானம் - நீண்ட பரந்த வானம், மருங்கு நெருங்க - பக்கத்தில்தானே நெருங்கவும், தோள் புறம் - தோளினிடத்தே, வாலதி சூழ்தர-வால் (வட்டமாகச்) சூழவும், நிற்போன்-நிற்பவனாகியஅனுமான்,- நாளொடு -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களுடனே, தாரகை - (மற்றுமுள்ள) நட்சத்திரங்களும், ஞாயிறு முதல்ஆம் கோள் - சூரியன் முதலிய நவக்கிரகங்களும், அணி - முறையாக, சூழ்வரு - பிரதட்சிணஞ்செய்கின்ற, குன்றம்உம் - மேருமலையையும்,ஒத்தான் - ஒத்திருந்தான்;(எ-று.) சிரசுவானத்திலே நெருங்க, தோளினிடத்து வாலதி சூழ்தர நிற்கும் அனுமான், தன்சிகரம் வானத்து நெருங்கத் தோட்பகுதியிலே நாள் தாரகை கோள் என்ற இவை சூழ்ந்து வரப்பெறும் மேருமலையைப்போன்றனன் என்க. (390) 54.-வானவர்அனுமானுருவைக்கண்டு வியத்தல். இவ்வகைமுன்ன மிலங்கையெரித்தான் பைவருநாகர் பணஞ்சுளியத்திண் மெய்வகைகொண்டது கண்டுவியந்தார் மைவகைசேரகல் வானவரெல்லாம். |
(இ-ள்.)முன்னம் இலங்கை எரித்தான் - முன்பு இலங்காபுரியை யெரித்தவனாகியஅனுமான்,-இ வகை - இவ்வாறு, பை வரு நாகர் பணம் சுளிய - படம்பொருந்திய நாகலோகத்துள்ளவரான அஷ்டமகாநகர்களின் படங்கள் (சுமை மிகுதியாற்)சுருங்க, |