பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்261

லையில்வடிவு கொள் பொழுதத்து - பழமையான (தன்) வடிவை அநுமான்
கொண்டபோது,-(அந்தஅநுமானைநோக்கி வீமசேனன்), அந்தம் இலாய் -
அழிவில்லாதவனே [சிரஞ்சீவியே!]அடியேன் பிழைஎல்லாம் - நான்
உன்னைப்பற்றிஅலட்சியமாகக் கருதிச்செய்த பிழையையெல்லாம்,
புந்திஉறாது- மனத்திற்கொள்ளாமல், பொறுத்தருள் - பொறுத்தருள்வாய்,
என்றான்-; (எ-று.)

     அநுமானைச்சாதாரண குரங்கெனக் கருதி முந்துறப் பேசியது
முதலியவற்றை மனத்திற்கொண்டு, வீமசேனன், இங்ஙனம் அபராதக்ஷாமணம்
செய்துகொள்ளுகின்றனன்.                                   (395)

59.-அனுமான்பாதங்களில் வீமன் விழ, அவன்
கூறலுறுதல்.

திருவடிதன்னிரு சேவடியிற்போய்
மருவடிதார்புனைமாருதிதொழவே
அருள்வடிவாகி யகண்டமுமெங்கும்
ஒருவடிவானவ னுற்றுரைசெய்வான்.

     (இ-ள்.)திருவடிதன் - அனுமானுடைய, இரு சே அடியில்-இரண்டான
செவ்விய பாதங்களில், போய்- கிட்டி, மரு வடி தார் புனைமாருதி -
வாசனையைவெளிப்படுத்துகின்ற மாலையையணிந்தவாயுகுமாரனான
வீமசேனன், தொழ - தண்டனிட,-அருள்வடிவு ஆகி அகண்டம்உம்
எங்குஉம் ஒரு வடிவு ஆனவன் - அருளே ஒரு வடிவு எடுத்தாற்போலப்
பேரருளுடையவனாகிப்பூமி முழுவதும் எல்லாவிடத்தும் அமையுமாறு
ஒப்பற்ற பேருருவெடுத்த அந்த அனுமான், உற்று - மனம்பொருந்தி,
உரைசெய்வான் - (பின்வருமாறு) பேசுவானானான்;(எ-று.)-அனுமான்
பேசுவதை மேற்செய்யுளிற் காண்க.

     திருவடி என்பது- அனுமானுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில்
வழங்கும்பெயர்: இவர் இராமபிரானுக்கு வாகனமாகி அப்பிரானது
திருவடிகளையேந்தினவராதலால், இப்பெயர் பெறுவர், மாருதி விழவே
என்றும் அருவடிவாகி என்றும் பிரதிபேதம்.                (396)

60.-அனுமான்அருளியது.

உன்னருகேபயி லும்பியரோடும்
மின்னருகேபயில் வேந்தொடும்வாழ்வுற்று
என்னருகேவரு கென்றனனென்றும்
தன்னருகேத முறாததவத்தோன்.

     (இ-ள்.)என்றுஉம் - எப்போதும், தன் அருகு-தன் சமீபத்திலும், ஏதம்
- குற்றமென்பது, உறாத- பொருந்தப்பெறாத,தவத்தோன் -
தவத்தையுடையவனாகியஅநுமான்,-(வீமனைநோக்கி), 'உன்அருகு -
உனது சமீபத்திலே, பயில் - பழகுகின்ற, உம்பிய