பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்263

    மன்றல்மலர்ப்பொழில் என்று பாடமுரைத்து, மன்றல் மலரைக்கொண்ட
பொழிலானது, வாவியின் - வாவியோடு, மன்னும் என்பாருமுளர்.
ஓசனை=யோசனை: நாற்காததூரம்: மரூஉமொழி.               (399)

63.அப்பொழில்காவ லரக்கரனேகர்
எப்பொழிலுந்திறை கொள்ளுமெயிற்றார்
துப்புடனேயவ ராவிதொலைத்தால்
செப்பியமாமலர் சென்றுறலாகும்.

     (இ-ள்.) அபொழில் காவல் - அந்தச் சோலையைப்
பாதுகாத்தலையுடைய,அரக்கர் அனேகர் - அனேகராட்சசர் (உளர்):
(அவர்கள்),-எபொழில்உம்-எல்லாவுலகத்தையும், திறைகொள்ளும் -
திறையாகக் கொள்ளுகின்ற [தின்றுகொல்லவல்ல],எயிற்றார்-
பற்களையுடையவர்: அவர் ஆவி - அந்த அரக்கரினுயிரை, துப்புடன் -
வலிமையுடனே, தொலைத்தால்- அழித்தால், செப்பிய-(நீ) கூறிய, மா மலர்
- சிறந்த மலரை, சென்றுஉறல் ஆகும்- போய்ப் பெறலாகும்;(எ-று.)

     காவலர்அக்கர் என்று பிரிக்கவும் இடனுண்டு: அங்ஙன் பிரிப்பின்,
அக்கர் - யக்கர் என்னவேண்டும்.                             (400)

64.அல்லதுநீடள காபதிதானும்
மெல்லியலும்பொழின் மேவியபோது
நல்லுறவாகி நயத்தொடுசென்றான்
மல்லன்மலர்தரு வோடுவழங்கும்.

     (இ-ள்.)அல்லது - இவ்வாறு கொள்ளாவிடின், நீடு
அளகாபதிதான்உம்-பெருமை பொருந்திய அளகைக்குத் தலைவனாகிய
குபேரனும், மெல்இயல்உம்-அவனது (மனைவியாகிய)பெண்ணும், பொழில்
மேவிய போது - அந்தச் சோலையிலேவந்து தங்கியபோது,
(அவர்களோடு), நல் உறவு ஆகி - நல்ல நட்புறவுபூண்டு, நயத்தொடு -
வணக்கத்தோடு, சென்றால்- (அவரிருக்கு மிடத்துக்குப்) போனால்,
(அவன்), மல்லல் மலர் - வளப்பம்பொருந்திய அந்த மலரை, தருவோடு -
(அதுதோன்றிய) கொடியுடனே, வழங்கும்-கொடுப்பான்;    (எ-று.)

     இது, சமாதானவழியாற் பூவைக்கொள்ள உபாயங்கூறியது.  தருவோடு
கற்பகதருவோடு என்று கூறுவாருமுளர்: இனி இந்த மலர்
கற்பகதருவினுடையதென்றும், குபேரனிடமும்உள்ளதென்றும் ஒரு சாரார்
கொள்கின்றனர்.                                           (401)

65.-நெறிமுதலிய கூறிய அநுமான் வீமனுக்கு
விடை கொடுத்தல்.

உறுதியுமொன்னல ரூக்கமுமேகும்
நெறியினதெல்லையினீர்மையுநெறியில்
குறிகளும்யாவையு மன்பொடுகூறி
அறிவுடையான் விடையன்பொடளித்தான்.