பக்கம் எண் :

266பாரதம்ஆரணிய பருவம்

     இதனால்புண்டரீகவரக்கனுடைய உடம்பினிறம் சிரசு வஞ்சனைக்
குணம் என்ற இவை கூறப்பட்டன;விஷத்தைக் கருநிறமுடையதென்ப.
மேகமொடு, அஞ்சனம்-மையையும் எனவுமாம்.  கொடியோடி - நீளமாகப்
போய் எனினுமாம்.  கால் - முதனிலைத்தொழிற்பெயர்.         (406)

70.குளிர்வரையொன்றிய நீள்குகரம்போல்
அளவில்பெரும்பகு வாயதின்மதியின்
பிளவெனலாவளையும்பிறழுந்தண்
இளநிலவென்ன விலங்குமெயிற்றான்.

     (இ-ள்.)குளிர் வரை ஒன்றிய - குளிர்ந்த மலையிலேபொருந்திய, நீள்
குகரம் போல்- நீண்ட குகைபோலே, அளவுஇல் பெரு - அளவில்லாது
மிகப்பெரிய, பகுவாய்அதின் - பிளவுபட்ட வாயிலே, மதியின் பிளவு எனல்
ஆ வளையும்-சந்திரனுடையபிளவு [பிறைச்சந்திரன்]என்று சொல்லுமாறு
வளைந்துள்ள,பிறழும் - விளங்குகின்ற, தண் இள நிலவு என்ன இலங்கும்
- குளிர்ந்த பிறை போல வெள்ளொளி வீசுகிற, எயிற்றான்- கோரப்பற்களை
யுடையவனும்,-(எ-று.)

     வளையும்எயிறு, பிறழும் எயிறு, இளநிலவென்ன விலங்கும் எயிறு
என்க.  இள நிலவு-இலக்கணையால்,பிறைச்சந்திரனாயிற்று.

71.ஆறிருகாத மகன்றுயர்தோளான்
நூறிருகாத நொடிக்குணடப்பான்
ஏறுடையான்முதல் யாவர்களெனினும்
மாறொடுகாதிமலைந்திடவல்லான்.

     (இ-ள்.) ஆறுஇரு காதம் அகன்று உயர் தோளான் - பன்னிரண்டு
காததூரம் விலகி உயர்ந்துள்ள தோள்களையுடையவனும்,நொடிக்குள்நூறு
இருகாதம் நடப்பான்-நொடிப் போதிற்குள் இருநூறு காததூரம் நடக்கும்
வல்லமையுடையவனும், ஏறு உடையான் முதல் யாவர்கள் எனின்உம்
மாறொடுகாதி மலைந்திடவல்லான் - ரிடபத்தை வாகனமாகவுடையவனான
சிவபிரான் முதல் யாவர் எதிர்த்துவந்தாலும் (அவரோடு) மாறுபாடுகொண்டு
மோதிப் போர்புரியும் வல்லமையையுடையவனுமாகிய,-(எ-று.)

     ஆறிருகாதம்,நூறிருகாதம்-பண்புத்தொகைகள். ஏறுடை யானைக்
கூறியது - சங்காரமூர்த்தி யாதலால்.  அகன்றிடு என்றும் பாடம்.      (408)

72.எண்டிசையுந்திறை கொண்டிகலோடும்
புண்டரிகப்பெயர் நாடுபொறித்தோன்
திண்டிறன்மாருதி சேய்வருவானைக்
கண்டனனங்கழல் கான்றிடுகண்ணான்.

     (இ-ள்.)இகலோடுஉம் - (தன்) பராக்கிரமத்தினால்,எண்திசைஉம்-
எட்டுத் திக்கிலும்,  திறை கொண்டு-வரிப் பொருளைப்