இது வானத்திலேசரீரமில்லாததாய்க் கேட்கப்படுதலால், ஆகாயவாணியென்றும், அசரீரியென்றும் கூறப்படும். தோமரம்-படையென்ற பொருளில் வந்தது: சிறப்புப்பெயர்பொதுப்பொருளது:"தொட்ட கொடுங்கதை தோளுறுமுன்னர்...விழுந்தான்"(81) என மேல் வருவதால் இங்ஙன்கொள்ளவேண்டும். தோளில் படை செலுத்தப்பட்டால் உயிரிழக்குமாறு இவனுக்கு முனிவன் சாபமென்க. (416) 80.-வீமசேனன்புண்டரீகவரக்கனுடைய தோள்மேற் கதையை ஏவுதல். அங்கசரீரி யரற்றியமாற்றம் சங்கையுறாதுசமீரணிகேட்டுப் பங்கயநாம நிசாசரபதிதன் துங்கவயப்புய மேற்கதைதொட்டான். |
(இ-ள்.)அங்கு-அவ்விடத்து, அசரீரி-ஆகாயவாணி, அரற்றிய- உரக்கச்சொன்ன, மாற்றம்-வார்த்தையை, சமீரணி-வாயுகுமாரனான வீமசேனன், சங்கை உறாதுகேட்டு - சங்கை கொள்ளாமல் செவியேற்று, பங்கயநாம நிசாசரபதி தன்-புண்டரீகனென்று பேருள்ள அரக்கனுடைய, துங்கம் - உயர்வாகிய, வயம்-வெற்றிபொருந்திய, புயமேல் - தோளின்மீது, கதை தொட்டான் - கதைகொண்டு மோதினான்;(எ - று.) அசரீரிவார்த்தையில் நம்புதல்கொண்டு புயமேற் கதையைக் தொட்டானென்பார் 'சங்கையுறாதுகதை தொட்டான்'என்றார். சமீரணி=ஸமீரணி:ஸமீரணனுடையகுமாரன்என்று அவயவப் பொருள்: ஸமீரணன்- வாயுதேவன். அரற்றிய சாபம் என்று பிரதிபேதம். (417) 81.-வீமன்கதைமேலேதீண்டுதலும் புண்டரீகன் வீழ்ந்திடுதல். தொட்டகொடுங்கதை தோளுறுமுன்னர்ப் பட்டுளநொந்து பதைத்தடல்வஞ்சன் வட்டநெடுங்கட லூடுமருத்தன்று இட்டபெருங்கிரி யென்னவிழுந்தான். |
(இ - ள்.)தொட்ட - (வீமசேனன்) தாக்கிய, கொடுங் கதை-கொடிய தண்டாயுதமானது, தோள் உறும் முன்னர் - தோளிற் படுதற்குமுன்னமே [தோளிற்பட்டவுடனே],-பட்டு - (கதை) தீண்டுதலால், உளம் நொந்து- மனம்வருந்தி, பதைத்து-துடித்து, அடல் வஞ்சன் - வலிமையையுடைய வஞ்சனைக்குணமுடையவனாகியஅந்தப்புண்டரீகராட்சதன்,- வட்டம் நெடுங் கடலூடு - வட்டவடிவாகவுள்ள பெரிய கடலிலே, மருத்து - வாயுதேவன், அன்று - முற்காலத்தில், இட்ட-கொண்டு செலுத்திய, பெருங் கிரி என்ன - பெரியமலைபோல,விழுந்தான்-;(எ-று.) |