பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்273

அண்டர் + மாநகர் =அண்டமாநகர்;உயர்திணையீறுவிகாரப்பட்டது.
உம்மை - உயர்வு.  அளகை - குபேரன்நகரம்.                (420)

84.-வீமன் தான்நாடிவந்த மலர்ப்பொழிலையடைதல்.

அந்தமாநகரின்றென்பா லகல்விசும்புறநின்றோங்கும்
விந்தமாமென்னநின்று விளங்குதோள்வீமசேனன்
முந்தைமாருதிநண்போடு மொழிவழியெய்தியந்தக்
கந்தவான்பொழிலுநன்னீர்க் கடிமலர்த்தடமுங்கண்டான்.

     (இ - ள்.)அகல் விசும்பு உற நின்று ஓங்கும் - (முன்னொரு
காலத்தில் மலையரசனாகியஇமவானோடுபகைத்துச் சூரியசந்திராதியரது
கமனமுந் தடைப்படும்படி) பரந்த ஆகாயத்தை யளாவ உயர்ந்துநின்ற,
விந்தம் ஆம் என்ன-விந்தியபருவதத்தை யொக்கும் (இது) என்னும்படி,
நின்று விளங்கு - நிலைபெற்றுவிளங்குகின்ற, தோள் - புயங்களையுடைய,
வீமசேனன்-, முந்தை மாருதி நண்போடு மொழி வழி எய்தி - முன்பு
அனுமான் (தன்னிடத்து) அன்புடனே சொன்ன வழியிற் சேர்ந்து, அந்த மா
நகரின் தென்பால்-அந்தப்பெரிய அளகாபுரியின் தென்புறத்திலே, கந்தம்
வான் அந்த பொழில்உம் - பரிமளத்தையுடைய உயர்ந்த (தான்
குறித்துவந்த) அச்சோலையையும்,நல் நீர் கடிமலர் தடம்உம்-(அதிலுள்ள)
சிறந்தநீரையும் வாசனையுடையபூக்களையுமுடையதடாகத்தையும்,
கண்டான்-பார்த்தான்;   (எ - று.)

    விந்தம்=விந்த்யம்:வடமொழித்திரிபு.  இங்கே 'அகல்விசும்புற
நின்றோங்கும்விந்தம்'என்றது -அகத்தியமகாமுனிவரால் அடக்கப்படுவதற்கு
முன்பு அம்மலைஎழுந்த நிலையை. முந்தை - ஐயீற்றுடைக்குற்றியலுகரம்.
முந்தை மாருதி என்பதற்கு - பழமையான அனுமா னென்றும்,
தனக்குமுன்பிறந்த அனுமா னென்றும் பொருள் கொள்ளலாம்.  கடி -
உரிச்சொல்.  தெற்கு+பால்=தென்பால்;[நன்- உயிர்-35.]       (421)

85.-நான்குகவிகள் -அப்பொழிலைக்காப்பவரின்
வருணனை.

ஆயிடைக்குறுகுமெல்லையப்பொழில்துப்பிற்காப்போர்
சேயிடைப்பரந்தமார்பர் சேணிடைக்கடந்ததோளர்
வாயிடைப்பிறைகளென்ன வளைந்தவாளெயிற்றர்வஞ்சத்
தீயிடைச்சோரிதோய்ந்து திரண்டெனச்சுழல்செங்கண்ணர்.

     (இ - ள்.) அஇடை குறுகும் எல்லை- (வீமன்) அவ்விடத்தைச்
சேருமளவில், அ பொழில் துப்பின் காப்போர் - அந்தச் சோலையை
வலிமையாற் காப்பவர்களும், சேய் இடை பரந்த மார்பர் - நெடுந்தூரம்
பரவின மார்பையுடையவர்களும், சேண் இடை கடந்த தோளர் -
ஆகாயத்தினிடத்தையுங் கடந்து உயர்ந்த தோள்களையுடையவர்களும்,
வாயிடை பிறைகள் என்ன வளைந்தவாள் எயிற்றர் - வாயிலே
பிறைச்சந்திரர்போல வளைந்