பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்279

94.-வீமன்கூறிய மறுமொழி.

தனிதமேகம்போலார்க்கும் நுமதுயிர்சரத்திற்சாய்த்திப்
புனிதவான்பொழிலில்வாசப் புதுமலர்கொய்யவந்தேன்
குனிதவர்கொண்டுமுன்னுங் குலங்கரிசறுத்தவீரன்
மனிதனோவானுளானோமறத்திரோவஞ்சரென்றான்.

     (இ-ள்.)'தனி தம் மேகம் போல் - இடியையுடைய மேகங்கள் போல
ஆர்க்கும் - ஆரவாரிக்கிற, நுமது - உங்களுடைய, உயிர்-பிராணனை,
சரத்தின் - (எனது) அம்புகளால், சாய்த்தி - ஒழியச் செய்து, புனிதம் வான்
பொழிலில் - பரிசுத்தமாகவுள்ள சிறந்த இச்சோலையிலே,வாசம் புது மலர்
கொய்ய - பரிமளத்தையுடைய புதிதாய்மலர்ந்த பூக்களைப்பறித்தற்கு,
வந்தேன்-;முன் - முன்காலத்திலே [திரேதாயுகத்திலே],குனி தவர்
கொண்டு - வளைந்த(கோதண்டமென்னும்) வில்லைக்கொண்டு, நும் குலம்
- உங்கள் கூட்டத்தை [ராக்ஷசசமூகத்தை],கரிசு அறுத்த - குற்றம் நீங்க
அழித்த, வீரன் - வீரத்தன்மையுள்ள இராமபிரான், மனிதன்ஓவான்
உளான்ஓ-மனிதனோதேவனோ? [தேவனல்லன்,மனிதனேயன்றோ];
வஞ்சர் - வஞ்சனையுடையவர்களே! மறத்திர்ஓ-(அதனை)மறந்து
விட்டீர்களோ?'என்றான்- என்று (அரக்கரை நோக்கி வீமன்) கூறினான்;
(எ-று.)

     இராமன் மனிதனாயினும்இராவணாதிராக்ஷசர்பலரை வேரறுத்ததுபோல,
நானும் மனிதனாயினும்அரக்கராகிய உங்களையெல்லாம் அழித்திட வல்லே
னென்றவாறாம். கொடிய அரக்கராகிய உங்களை ஒழித்தபின்பே
சோலைபரிசுத்தமாகு மென்பான், 'நுமதுயிர்சரத்திற்சாய்த்தி' என்றதன்பின்
'புனிதவான்பொழில்'என்றான். ஸ்தநிதம் - வடசொல். சாய்த்தி-பிறவினை
வினையெச்சம். 'சாய்த்து'என்றும் 'கருவறுத்த' என்றும் பாடங்கள் உண்டு.
குனி தவர்-வினைத்தொகை.முன் உம் என்றும் பிரிக்கலாம்.          (431)

95.-இதுமுதல்ஆறுகவிகள் - அரக்கர் வீமனைச்சூழ்ந்து
கொண்டு பொரஅவ்வீமன் அவர்களையழித்தமைகூறும்.

மாவிந்தமனையபொற்றோண்மாருதிவாய்மைகேட்டுப்
பூவிந்தவனத்தினீயோ பறித்தியென்றழன்றுபொங்கி
நாவிந்தவுரைதந்தின்னு மிருப்பதோநரனுக்கென்னாக்
கோவிந்தனெடுத்தகுன்றிற் கொண்டலின்குழாத்திற்சூழ்ந்தார்.

     (இ-ள்.) மாவிந்தம் அனைய- உயர்ந்த விந்தியமலையையொத்த,
பொன் தோள் - அழகிய புயங்களையுடையமாருதி - வாயுகுமாரனான
வீமனது, வாய்மை - வாயிலிருந்து வந்த வார்த்தையை, கேட்டு-(அரக்கர்கள்)
செவியுற்று, 'நீஓ இந்த வனத்தில் பூ பறித்தி- நீயா இச்சோலையில்மலர்
கொய்திடுவாய்!'என்று - என்றுகூறி, அழன்று பொங்கி - சீற்றங்கொண்டு
எழுந்து, இந்த உரை தந்து இன்னும் நரனுக்கு நா இருப்பதுஓ என்னா-'இப்