தனி யொப்பவரான,இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்-யக்ஷர்களுடைய மரபிலே நன்குமதிக்கப்படுகிற சேனைத்தலைவர்கள்,துன்னு படை கடலோடுஉம்-நெருங்கிநின்ற (தமது) சேனாசமுத்திரத்துடனே,பொங்கி- (போரில்) ஊக்கம்மிக்கு, மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன் தன்னை-நிலைபெற்றகுருவென்னும் அரசனது மரபிலே பிறந்த அரசர்களுக்கெல்லாந் தலைவனானவீமசேனனை,சூழ்ந்தார்- வளைந்துகொண்டார்கள்;(எ-று.) குரு-சந்திரகுலத்துப் பிரசித்திபெற்ற ஓரரசன்- வீமனை'குருக்கள் குலத்து மன்னர்மன்னன்'என்றது, அவனது பெருந்தகைமையை விளக்க. படைக்கடல்-கடல்போற் பரவிய சேனை. மன்னு-(அவ்விடத்தில்) வந்து சேர்ந்த, மன்னன் என்றுமாம். படைக்கலமோடும் என்று பிரதிபேதம். (449) 113.-இயக்கரிடைநின்றவீமன் வருணனை. மானவ ரக்கர்கு லத்தைவானிலேற்றி ஊனொடிரத்தமு குக்குஞ்சோலையூடே தானைவளைத்திடநின்றசாபவீரன் யானையினங்கள்வளைக்கும்யாளிபோன்றான். |
(இ-ள்.) மானம் அரக்கர் குலத்தை வானில் ஏற்றி- அகங்காரத்தையுடைய இராக்கதர்கூட்டத்தை (முன்னே போரிற்கொன்று) வீரசுவர்க்கத்திற் சேரச்செய்துவிட்டு, ஊனொடுஇரத்தம் உகுக்கும் சோலையூடே-(அவ்வரக்கர்களது)தசையுங் குருதியுஞ் சிந்திக்கிடக்கப்பெற்ற அச்சோலையிலே,தானைவளைத்திட-(இப்பொழுது)இயக்கர்சேனை (தன்னைச்)சூழ்ந்திட, நின்ற-(அதனிடையிலே) நின்ற, சாபம் வீரன்-வில்லில் வல்ல வீரனானவீமன், யானைஇனங்கள் வளைக்கும்யாளி போன்றான்- யானைக்கூட்டங்களாற்சூழப்படும்யாளியைப் போன்றான்;(எ-று.) யாளி-யானையைக்கொல்வதும்,சிங்கம்போல்வதும், துதிக்கையுடையதுமாகியதொரு மிருகவிசேடம். பல யானைகள்ஒருங்கு சூழ்ந்தும் ஒருயாளியை ஒன்றும் ஊறுசெய்யமாட்டாமல் அதனால்தாம் அழிக்கப்படுவதுபோல, பல இயக்கர்கள் கூடிவளைத்தும்வீமனையாதும் நலிவுசெய்ய இயலாது அவனால்தாம் மேல் அழிதல் பற்றி, இவ்வுவமை கூறப்பட்டது. யாளி-சிங்கமென்றுங் கொள்ளலாம். யுத்தகளத்திற் பின்வாங்காமற் போர்செய்துநின்று பகைவரால் இறந்தவர் வீரசுவர்க்கமடைவ ரென்னும் நூற்றுணிபால், 'அரக்கர்குலத்தை வானிலேற்றி'என்றார். (450) 114.-தன்னைவளைந்தஅரக்கர்மேல் வீமன் சரங்களை வீசுதல். விண்ணிலி யக்கர்ப டைக்கலங்கள்வீசி எண்ணிலர்சுற்றும்வ ளைத்தெதிர்ந்தபோதில் வண்ணவ ரிச்சலைகோலிவாயுமைந்தன் துண்ணெனவுட்கவ டிச்சரங்கடொட்டான். |
|