பக்கம் எண் :

290பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)விண்ணில் - ஆகாசமார்க்கத்திலே, எண் இலர் இயக்கர் -
அளவிறந்தவரான [அநேக]யக்ஷர்கள்,படைக்கலங்கள் வீசி-ஆயுதங்களை
மேல் எறிந்துகொண்டு, சுற்றும் வளைத்து-(தன்னைச்)சுற்றிலும் சூழ்ந்து,
எதிர்ந்தபோதில்-(தன்னை)எதிர்த்தபொழுது,-வாயுமைந்தன் - காற்றின்
மகனானவீமன், வண்ணம் வரி சிலைகோலி-அழகிய கட்டமைந்த வில்லை
வளைத்து,துண்ணென உட்க-(அவர்கள்) திடுக்கிட்டு நடுங்கும்படி, வடி
சரங்கள் தொட்டான்-கூர்மையான அம்புகளை(அவர்கள்மேல்) எய்தான்;

     துண்ணென -அச்சக்குறிப்பிடைச்சொல்.  தொட்டான், தொடு-பகுதி.
சுற்றும்-சுற்றிலும்;எப்புறத்தும்.                             (451)

115.-இயக்கசேனைகளிற்சிலசேனையொழியச்சில
நிலைகெட்டுஓடுதல்.

தொட்டசரங்கடு ளைத்துமார்புந்தோளும்
முட்டவிசும்பின தெல்லையெங்குமூடப்
பட்டதொழிந்துப டாதசேனையெல்லாம்
கெட்டனபட்டது ரைக்கவுண்டோகேட்கின்.

     (இ-ள்.)தொட்ட சரங்கள்-(வீமனாற்)பிரயோகிக்கப்பட்ட அம்புகள்,
மார்புஉம் தோள்உம் துளைத்து- (அவ்வியக்கர்களது) மார்பையுந்
தோள்களையுந்தொளைசெய்து,விசும்பினது எல்லைஎங்குஉம் முட்ட மூட
- ஆகாயத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி பரவி மறைக்க, பட்டது
ஒழிந்து-(அவ்வியக்கர் சேனைகளுள்)இறந்தது தவிர, படாத சேனை
எல்லாம் - இறவாத சேனைகள்பலவும், கெட்டன-உறுதிநிலைகெட்டு
முதுகிட்டோடின;பட்டது-(அச்சேனைகள்அப்போது) அடைந்த
நிலைமையை,கேட்கின் - வினாவினால், உரைக்க உண்டுஓ - (நம்மாற்)
சொல்ல வகையுண்டோ?  [இல்லை];

     ஒழிந்து -ஒழிய, எச்சத்திரிபு, ஓ-எதிர்மறை.                (452)

116.-சங்கோடணன்புறங்கொடுத்தல்.

மன்னளகாபதி சேனைநாதன்மார்பில்
தன்னடையாளமு றத்தண்டாலேதாக்க
மின்னிடைநாகம்வெ ருக்கொண்டென்னமீண்டான்
தன்னெதிர்வீரரி லாதசங்கோடணன்றான்.

     (இ-ள்.) மன்அளகாபதி சேனைநாதன்மார்பில்-பெரிய அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது படைத்தலைவனாகியசங்கோடணனது மார்பிலே, தன்
அடையாளம் உற தண்டாலே தாக்க-தனது தழும்பு படும்படி (வீமன்)
கதாயுதத்தாலே அடிக்க,-தன்எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான் -
தனக்கு எதிரில் எந்த வீரரும் (இது வரையிற் போரில்) நிற்கப்பெறாத
அச்சங்ககோடணன்,-மின்னிடைநாகம் வெரு கொண்டு என்ன - (மேகம்)
மின்னுகையில் பாம்பு (இடிக்கு) அச்சங்கொண்டாற்போல, மீண்டான் -
(அஞ்சிப் புறங்கொடுத்துத்) திரும்பினான்;(எ-று.)