தன் எதிர்வீரர் இலாத - தனக்கு ஒப்பானவீரர் எவரையும்பெறாத என்றும் உரைக்கலாம். மின் - இலக்கணையால்இடியைக் காட்டிற்று. இடியொலியைக் கேட்பினும் நாகம் அஞ்சியொடுங்கும். (453) 117.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமனோடு சமாதானஞ்செய்துகொள்ளும்படி சங்கோடணன் குபேரனுக்குக் கூறுதல். கருத்தொடுசென்றள கேசன்பாதகமலம் சிரத்தினில்வைத்திவை நின்றுசெப்பலுற்றான் உருத்திரன்மானுட வுருவங்கொண்டதன்றேல் வரத்திவன்மானுட னல்லன்மன்னவென்றே. |
(இ-ள்.)சென்று - போய், அளகேசன் பாதகமலம் - அளகாபுரிக்கு அரசனானகுபேரனது திருவடித்தாமரைமலர்களை,கருத்தொடு-மனத்தில் அன்புடனே, சிரத்தினில் வைத்து-(தனது) தலையின்மேற்கொண்டு [சாஷ்டாங்கமாகத்தெண்டனிட்டு],நின்று-(அருகில்) நின்று, இவை - இவ்வார்த்தைகளை,செப்பல் உற்றான்-கூறத்தொடங்கினான்:-(அவை யாவையெனின்), 'மன்ன-அரசனே! உருத்திரன் மானுட உருவம் கொண்டது - (அழித்தற்றொழிற்கடவுளான)சிவபெருமான் இம்மனித வடிவத்தைக்கொண்ட தன்மையாதல்வேண்டும்;அன்றுஏல் - அவ்வாறன்றி, வரத்து இவன்-மேன்மையுடைய இவ்வீரன், மானுடன் அல்லன்-சாதாரண மனிதனாகமாட்டான்,'என்று - என்றுகூறி,-(எ-று.)-என்றான்என மேற்கவியில் தொடரும். அளகா+ஈசன்=அளகேசன்: உருத்திரன்=ருத்திரன்: [நன்-பத-21,22]. வரத்து-வருதலையுடையஎன்றுமாம்;தொழிற்பெயர். 118. | பண்புடனிக்கணம் வேண்டுநிதிகள்பலவும் நண்பொடவற்கெதிர் சென்றுநல்காயென்னின் விண்புகுமிப்புரம் வேந்தவென்றான்மெய்யில் புண்புகவுட்கியு ழைக்கும்வேழம்போல்வான். |
(இ-ள்.)'வேந்தே-அரசனே! பண்புடன்-நற்குணத்துடனே, இ கணம்- இந்தக்ஷணத்திலே, அவற்கு எதிர் சென்று-அம்மனிதனுக்கு எதிரிற்போய், வேண்டும் நிதிகள் பலஉம்-(அவன்) விரும்பும் பலவகைச் செல்வங்களையும், நண்பொடு-சினேக வகையால், நல்காய் என்னின்-(நீ)கொடாதொழிவையானால், இ புரம் - இந்த நகரத்துப் பிராணிவர்க்கம்முழுவதும், விண் புகும் - (இறந்து) மேலுலகத்தையடையும்,'என்றான்-என்று(குபேரனைநோக்கிக்) கூறினான்: (யாரென்னில்), மெய்யில் புண் புக உட்கிஉழைக்கும் வேழம் போல்வான்- (தன்) உடம்பில் விரணமுண்டாக (அதனால்)ஒடுங்கி வருந்துகின்ற யானையை ஒப்பவனாகியசங்கோடணனென்னுஞ்சேனைத்தலைவன்;(எ-று.) |