சங்கோடணன்இயற்கையில் மிக்கஉடல்வலிமையையும் அடங்காப் பெருஞ் சீற்றத்தையும் கம்பீரமான தோற்றத்தையு முடையவனாதலாலும், இப்பொழுது வீமன் கதையால் மார்பிலடிபட்டு வலியொடுங்கினமையாலும், புண்புகவுட்கியுழைக்கும்வேழம் இவனுக்கு உவமை கூறப்பட்டது. நல்காய்- முன்னிலையொருமை யெதிர்மறைமுற்று; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. புரம்-இடவாகுபெயர். உட்கியிளைக்கும்என்று பிரதிபேதம்.(455) 119.-வீமன்விருப்பத்தையறிய உருத்திரசேனனென்னும் மகனைக்குபேரன் விடுத்தல். கோதிலியக்கனி யாவுங்கூறக்கேட்டுத் தாதையுருத்திர சேனன்றன்னைநோக்கி மாதர்மலர்ப்பொழி லூடுவந்தமனித்தன் ஏதிலருத்திய னென்னக்கேட்டியென்றான். |
(இ-ள்.) கோதுஇல் இயக்கன்-குற்றமில்லாத (சங்கோடணனென்னும்) அந்த யக்ஷன், யாஉம் கூற-இவையெல்லாவற்றையுஞ் சொல்ல, கேட்டு-, உருத்திரசேனன் தன்னைநோக்கி-ருத்திரசேனனென்னும் (தனது) இளைய குமாரனைப்பார்த்து, தாதை-(அவனது) தந்தையான குபேரன், 'மாதர் மலர்ப்பொழிலூடுவந்த மனித்தன் - (கண்பார்க்கு) விருப்பத்தை விளைக்கின்ற(நமது) பூஞ்சோலையிலேவந்த மனிதனை,ஏதில் அருத்தியன் என்ன கேட்டி-எந்தப் பொருளில் விருப்பமுடையவ னென்று (நீ போய்க்) கேட்பாய்,'என்றான்-என்றுகூறினான்;(எ-று.) ருத்திரசேனனென்பதற்கு - கொடுமையான சேனைகளையுடையவனென்றுபொருள். மனித்தன்-மனிதன் என்பதன் விரித்தல். 120.-உருத்திரசேனன்வீமனைச்சென்றுகாணுதல். தந்தையுரைத்தருள் வாய்மைதலைமேற்கொள்ளா மைந்தனுமப்பொழி லூடுசென்றுமன்னிச் சிந்தியரக்கர்சி ரங்கள்குன்றஞ்செய்து கந்தனினிற்கும றத்தினானைக்கண்டான். |
(இ-ள்.)தந்தை - (தனது) பிதாவான குபேரன், உரைத்தருள- (அன்போடு) சொல்லிய, வாய்மை-வார்த்தையை, தலைமேல்-கொள்ளா- தலையின்மேற்கொண்டு [கௌரவித்து],மைந்தன்உம் - குமாரனான உருத்திரசேனனும், அ பொழிலூடு சென்று மன்னி - அந்தச் சோலையினிடத்திற்போய்ச் சேர்ந்து, அரக்கர் சிரங்கள் சிந்தி குன்றம் செய்து கந்தனின் நிற்கும் மறத்தினானை-இராக்கதர்களதுதலைகளை அறுத்துத் தள்ளி மலைபோலக்குவித்து முருகக் கடவுள்போல (ப்பராக்கிரமங்கொண்டு) நிற்கிற வலிமையையுடைய வீமனை,கண்டான் - பார்த்தான்;(எ-று.) வாய் -வாயிலிருந்துவருஞ் சொல்லுக்கு ஆகுபெயர்;மை - பகுதிப்பொருள்விகுதி. தலைமேற்கொள்ளுதல்- சிரசாவகித்தல். |