பக்கம் எண் :

294பாரதம்ஆரணிய பருவம்

ஒருநாள் கிருஷ்ணனைத்திருவயிற்றிற் கயிற்றாற்கட்டிஓருரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை
மருதமரத்தின் நடுவேஎழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று
இழுக்கப்பட்டபடியினால்அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன்
நாரத சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங்
குபேரபுத்திர ரிருவரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பது கதை;அத்தை
மகனைமைத்துனனென்பது முற்காலத்து வழக்கம்.  கண்ணனது தந்தையான
வசுதேவருக்குக் குந்தி உடன்பிறந்த முறையாதல் பற்றி, வீமன் கண்ணனுக்கு
மைத்துனனாவன். மைத்துனன், மன்னவன், வீமன், மருத்தின் மைந்தன் -
தன்மையிற் படர்க்கை.                                        (459)

123.-வீமனைஉருத்திரசேனன் அங்குவந்த
காரணம்வினாவ,வீமன் கூறினமை.

மாயவனற்புதனாதன்கண்ணன்வையம்
தாயவன்மைத்துன னாகினையதனிநீ
ஏயவனத்தினில் வந்ததென்கொலென்றான்
தூயவனுற்றன யாவுந்தோன்றச்சொன்னான்.

     (இ - ள்.)'ஐய-ஐயனே!நீ-, மாயவன் - மாயையுடையவனும், அற்புதன் -
ஆச்சரியகரமான குணஞ் செயல்களையுடையவனும்,நாதன் - (யாவர்க்குந்)
தலைவனும்,வையம் தாயவன் - உலகங்களைஅளவிட்டவனும் ஆகிய,
கண்ணன் - க்ருஷ்ணபகவானுக்கு, மைத்துனன் ஆகின் - அத்தைமைந்தனாவையானால், தனி - தனியே, ஏய வனத்தினில் வந்தது -
பொருந்தின இச்சோலையில்வந்திட்டது, என்கொல்-என்ன காரணத்தாலோ?'
என்றான்- என்று வினவினான்:(அப்பொழுது), தூயவன்- பரிசுத்தகுணமுடைய
வீமன், உற்றன யாஉம்-நடந்த செய்திகளையெல்லாம், தோன்றச்சொன்னான்-;

    அற்புதன்-அத்புதன்;கண்ணன்-க்ருஷ்ணன்:வடசொற்றிரிபுகள்.
வாமனனானதிருமால் பலிசக்கரவர்த்தியினிடம் மூவடி மண்பெற்றுத்
திரிவிக்கிரமனாகிஆகாயத்தையளவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்
மற்றோரடியால்விண்ணையும்அளந்து மூன்றாமடிக்காகஅவன் சொன்னபடி
அவன் தலைமேற்காலைவைத்துஅவனைப்பாதாளத்திலழுத்தி அடக்கினா
னாதலால்,'வையந்தாயவன்'என்றது.  தாயவன்-தா-பகுதி:இதுவே
உகரச்சாரியை பெற்றுத் தாவு என நிற்பது.  ஏய - ஏய் என்னும்
பகுதியடியாப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்;ய் என்னும் இறந்தகால
இடைநிலைவரத்தனிக்குறிலைச்சாராதபகுதியீற்றுகரங் கெட்டது.        (460)

124.-வீமன் வேண்டியமலரை அவனுக்குக் கொடுத்து
அனுப்பிவிட்டு,உருத்திரசேனன் நிகழ்ந்த செய்தியைத்
தாதையிடங் கூறல்.

மற்றவனவ்வுரை கூறமகிழ்வொடந்தண்
பொற்றருநண்பின் வழங்கிப்போகென்றருளி