பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்301

132.-தருமன்கடோற்கசனோடுதேரில் அந்தரவழியாயச்
செல்லுதல்.

கரக்கும்பகம்பக்கடாயானைமன்னன்கருத்தோடுசென்று
அரக்கன்றடந்தேரிலவனோடுநீடந்தரத்தேகினான்
பரக்கும்பெரும்புண்யமும்பாவ முந்தாவில்பகிரண்டமும்
புரக்கும்பரஞ்சோதியும்பொங்கு மாமாயையும்போலவே.

     (இ-ள்.)பரக்கும் பெரு புண்யம்உம் பாவம்உம் (போல)-
பரவுந்தன்மையுள்ள பெரிய நல்வினையின்வடிவமும் தீவினையின்
வடிவமும் போலவும், தா இல் பகிர் அண்டம்உம் புரக்கும் பரம்சோதிஉம்
பொங்கும்மா மாயைஉம் போல - அழிதலில்லாத (இந்த அண்டத்தை
மாத்திரமேயன்றி மற்றை) வெளியிலுள்ள அண்ட கோளங்களையும்காக்குந்
தன்மையுள்ள (எல்லா வொளிகளினும்) மேம்பட்ட ஒளிவடிவமான
பரப்பிரமமும் (பலவகையாகப்) பரிணமிக்குந் தன்மையுள்ள பெரியமாயையின்
வடிவமும் போலவும்,-கரம்கும்பம் கம்பம் கடாம்யானைமன்னன்-
துதிக்கையையும் மத்தகத்தையும் அசையுந்தன்மையையும்
மதநீர்ப்பெருக்கத்தையுமுடைய ஆண் யானைக்குஒப்பான தருமராசன்,
கருத்தோடு சென்று-விருப்பத்துடனே போய், அரக்கன் தட தேரில்-
இராக்கதனாகியகடோற்கசனுடைய பெரியதேரின் மேலே, அவனோடு-
அக்கடோற்கசனுடனே, நீடு அந்தரத்து-நீண்ட ஆகாயவழியிலே, ஏகினான்-
சென்றான்;

     தருமூர்த்தியும்க்ஷத்திரியதேஜசையுடையவனுமான யுதிட்டிரனுக்கு
நல்வினையின்வடிவமும் ஒளிவடிவமான பரமான்மாவும், அரக்கமகனான
கருநிறமுடைய கடோற்கசனுக்குத் தீவினையின்வடிவமும் மாயையும்
உவமையெனக் காண்க.  கும்பம் - குடம் போன்ற வடிவமுடையது;
மத்தகத்துகுக்குக் காரணக்குறி: உவமவாகுபெயர்.  கம்பம்-வடசொல்:
எப்பொழுதும் அசைந்துகொண்டிருத்தல் யானையின்இயல்பு;
இனி, கம்பம்
என்பதற்கு-கட்டுத்தறியிற் கட்டிவைத்தற்குரிய என்றும்,  கட்டுத்தறியை
முறிக்குந் தன்மையுள்ள என்றும்,  தூண்கள் போன்ற கால்களையுடைய
என்றும் பொருள் கொள்ளலாம்.  பாவம் மாயை என்ற இவற்றைக்
கருநிறமுடையன என்றல் நூல்மரபு.  உவமையணி.            (469)

133.-தருமகடோற்கசரேறினதேர் குபேரன்சோலையை
யடைதல்.

கானெல்லைசெல்லாதுகதிரோனெடுந்தேரெனக்கங்கைசேர்
வானெல்லையுவோடியொருநாலுகடிகைக்குள்வயமன்னுதேர்
ஊனெல்லையில்லாதுபுகமண்டிமிகமண்டுமுதிரத்துடன்
தேனெல்லையில்லாதுகுக்கும்பெருஞ்சூழல்சென்றுற்றதே.

     (இ-ள்.) வயமன்னுதேர்-வலிமைபொருந்தின அத்தேரானது,-கான்
எல்லைசெல்லாது - அக்காட்டினிடத்திலே [பூமியில்]செல்லாமல்,
கதிரோன் நெடு தேர் என-ஆயிரங்கிரணங்களையுடையவனான