(இ-ள்.) மைகாளம் முகில் அன்ன-அஞ்சனத்தையும் காளமேகத்தையும் (நிறத்தில்) ஒத்த, மகன்உம் - (தனது) குமாரனான கடோற்கசனும், தன் அடி மன்ன-தனது பாதங்களிற் பொருந்தி வணங்க, வயம் வீமன்உம் - சயத்தையுடைய வீமசேனனும், கானில் நறை வாசம் மலர் கைகொண்டு-அச்சோலையிலுள்ளதேனையும்மணத்தையுமுடைய பூக்களைக்கைகளில் எடுத்துக்கொண்டு வந்து, அறன் காளைகழல் நல்கி- தருமபுத்திரனது பாதங்களிலேயிட்டு அருச்சித்து, முக் கால்உம் வலம்வந்து- மூன்று தரம் பிரதக்ஷிணஞ்செய்து, முறையோடு - சாஸ்திரவிதிப்படியே, தொழுவானை-(சாஷ்டாங்கமாக)நமஸ்கரிப்பவனை,முகம் நோக்கி நின்று - முகத்தைப் பார்த்துநின்று, நா வந்தது எக் கால்உம் இசையாத இசையோன்உம்-வாயில் வருகிற வசைச்சொற்களைஎப்பொழுதுங் கூறுதன்மையில்லாத கீர்த்தியையுடைய யுதிட்டிரனும், இவை கூறுவான் - (அப்போது) இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவை மேற்கவியிற் கூறப்படும். வீமன் தொழுவானை-தொழுவானாகியவீமனையென்க. எக்காலும் - பிறர் தீங்குசெய்த காலத்திலு மென்றபடி. எக்காலும் நாவந்ததிசையாத இசையோன்-ஒருபொழுதிலுங் கண்டபடி கடுஞ்சொல்லைக்கூறி யறியாத பொறுமைக் குணத்தின் பெருமையையுடையவ னென்றபடி. (472) 136.-தன்கட்டளையின்றிப்பெண்வார்த்தையால் தனித்துவந்துபொருததுபற்றித் தருமன் வீமனைச் சினத்தல். என்னேவலாலன்றியிமையோரு மெய்தாதவிக்காவினீ மின்னேவலால்வந்துவிரகாக வினைசெய்தவிதுமேன்மையோ உன்னேவல்புரிவாருமுளரும்பி மாரென்றுருத்தானரோ தன்னேவலாலிந்தவுலகேழும் வலம்வந்ததனியாழியான். |
(இ-ள்.)'இமையோர்உம்எய்தாத இ காவில்-தேவர்களும் நுழையக்கூடாத [மிக்ககாவலையுடைய]இந்தச் சோலையிலே,நீ-,என் ஏவலால் அன்றி-எனது அனுமதியினாலல்லாமல், மின் ஏவலால்-மின்னற் கொடிபோன்ற திரௌபதியினது கட்டளையால்,விரகுஆக வந்து- கபடமாகவந்து, வினைசெய்த- (போர்முதலிய) தொழில்களைச்செய்த, இது - இச்செய்கை, மேன்மைஓ - சிறப்பாமோ? உன் ஏவல் புரிவார்உம் உம்பிமார் உளர்-(தங்கள் தமையனான)உனது கட்டளையைச் செய்பவர்களும் உன் தம்பியர் இருக்கின்றனரன்றோ?'என்று - என்றுசொல்லி, உருத்தான்-கோபித்தான்: (யாரென்னில்), தன் ஏவலால் இந்த உலகு ஏழ்உம் வலம் வந்த தனி ஆழியான்-தனது கட்டளையால் இந்த ஏழு தீவுகளையுடையஉலக முழுவதிலுஞ் சூழ்ந்துவருந் தன்மையதான ஒப்பற்ற ஆஜ்ஞா சக்கரத்தையுடைய தருமன்;(எ-று.) உனதுதம்பியராகிய அருச்சுனனாதியர்உன்ஏவற்படி நடக்க, எனது தம்பியாகிய நீமாத்திரம் எனது ஏவலின்றி யொழுகுவது |