தகுதியோவென்றவாறு. மின்ஏவலால் வந்து விரகாக என்றது, தையல்சொற்கேட்ட இழிதகைமையை விளக்கும் 'மின்'என்றது அவளுடைய தேக காந்தியிலே ஈடுபட்டு வீமன் அங்ஙனஞ்செய்தானென்பதை யுணர்த்துதற்கு. விரகு-தந்திரம். ஆணையைச்சக்கரமென்றல், மரபு. இவ்வுலகம் ஏழுதீவுகளையுடைமைபற்றி 'உலகேழும்'என்றார்: ஆகவே, இங்கு உலகுஎன்பது தீவுஎன்று அதன் ஏகதேசத்தை யுணர்த்திற்றென்க: "மாயோன்மேயகாடுறை யுலகமும்"என்ற இடத்துப்போல. அரோ-ஈற்றசை. (473) 137.-தருமன்முனிவாறித் தாம் வசித்திருந்த காட்டை மீண்டடைதல். என்றிந்தவுரைகூறிமுனிவாறி யிறையோனுமிகலோனுடன் சென்றந்தண்மலர்வாவிபடிவுற்று வாசத்திருத்தார்புனைந்து அன்றந்தவிடம்விட்டிமைப்போதி லத்தேரின்மிசையேறியே மின்றந்தவிடையாளுமிளையோருமுறைகானினிடைமேவினான். |
(இ-ள்.) என்றுஇந்த உரை கூறி-என்று இந்த வார்த்தைகளைச் சொல்லி, முனிவு ஆறி - (உடனே) கோபந்தணிந்து, இறையோன்உம் - (யாவர்க்குந்) தலைவனானதருமனும், இகலோனுடன் சென்று - வலிமையையுடைய வீமனுடனேபோய், அம் தண் மலர் வாவி படிவுற்று - அழகிய குளிர்ந்த பூக்களையுடையஅப்பொய்கையிலே நீராடி, வாசம் திரு தார் புனைந்து- வாசனையையுடையஅழகிய (அப்பொய்கையிலுள்ள) மலரைச் சூடி, அன்று - அப்பொழுதே, அந்த இடம் விட்டு-அவ்விடத்தை நீங்கி, இமைப்போதில் - ஒரு நொடிப்பொழுதிலே, அ தேரின்மிசை ஏறி - அந்தக் கடோற்கசனது இரதத்தின்மே லேறிக்கொண்டு, மின் தந்த இடையாள்உம் இளையோர்உம்உறை கானினிடை மேவினான்- மின்னலையொத்தஇடையையுடைய திரௌபதியும் (தனது) இளைய தம்பிமாரான நகுலசகதேவரும் வசிக்கின்ற அக்காட்டில் வந்திட்டான்; இகலோன் -கடோற்கச னென்பாரு முளர். மின் தந்த இடை, தந்த- உவமவுருபு. தார் என்னும் மாலையின்பெயர்,அதற்குக்கருவியான பூவுக்கு இங்கே காரியவாகுபெயர். (474) 138.-தருமன்உரோமசனைவணங்கி, திரௌபதிக்கு மலரளித்து,கடோற்கசனுக்கு விடைதந்தனுப்புதல். மேவிப்பெருந்தெய்வமுனிபாதமலர்சென்னிமிசைவைத்துமென் காவிக்கயற்கண்ணிணைச்சேயி தழ்ப்பாவைகளிகூரவே வாவிச்செழுந்தாமமலர்நல்கி யொல்காதுவலிகூருநல் ஆவிக்கின்னமுதானநிருதற்கு விடையன்றளித்தானரோ. |
(இ-ள்.)(யுதிட்டிரன்), மேவி - வந்துசேர்ந்து, பெரு தெய்வம் முனி பாதம் மலர் சென்னிமிசை வைத்து - சிறப்புள்ள தேவ விருடியான உரோமசமகாமுனிவனது திருவடித்தாமரைப் பூவைத்(தனது) தலைமேற் கொண்டுவணங்கி, மெல் காவி கயல் இணைகண் சேய் இதழ் பாவை களிகூர - மென்மையான நீலோற்பல |