தாமரைமலர்போன்றதிருவடிகளைவணங்கி, துன்பம்உம் துனிஉம் மாறி- துன்பங்களும் கவலையும்ஒழிந்து, நாள்தொறுஉம் - தினந்தோறும், தோகைபாகன்தன் பெரு கதைஉம் கேட்டு-தோகையுள்ள மயில்போலுஞ் சாயலையுடையஉமாதேவியைஇடப்பாகத்திற் கொண்ட சிவபிரானது சிறந்த சரித்திரத்தையுங் கேட்டுக்கொண்டு, அந்த கானில்-அக்காட்டிலே, தங்கினர்- தங்கியிருந்தார்கள்;(எ-று.)-என்ப- அசை. மாது, ஓ - ஈற்றசை. தோகைபாகன்தன் பெருங்கதை-திரிபுரசங்காரம் போல்வன. தோகை - மயிலிறகு;இங்கே இருமடியாகுபெயர். தோகைபாகன் பெருங்கதை கேட்டது-பாசுபதம்பெற அருச்சுனன் அப்பிரானைக்குறித்துச் சென்றிருத்தலினாலாகும். உம்மையால், பிற புண்ணிய சரித்திரங்களையுங் கொள்ளலாம். முன்னே 'மின்புரைமருங்குல்'என வந்ததனால்,பின்பு 'மின்'என்றது - பெண்ணென்னுமாத்திரையாய் நின்றது. இக்கவி -கீழ் எண்பத்திரண்டாங் கவிபோன்ற அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம். (476) புட்பயாத்திரைச்சருக்கம் முற்றிற்று. நான்காவது சடாசுரன் வதைச்சருக்கம் சடாசரன்என்பவனது கொலையைக்கூறும் பாகமென்று பொருள். சடாசுரன் என்பதை ஜடா அசுரன் என்று பிரித்து, சடை முடியையுடைய அசுரனென்று பொருள் கொள்க. அசுரன் என்பது - அ சுரன் எனப் பிரிந்து தேவனல்லாதவ னென்றும், பாற்கடல் கடைந்த காலத்து அதனினின்று உண்டான மதுவைப் பானஞ் செய்யாதவ னென்றும், அசு ரன் எனப் பிரிந்து (பகைவர்) உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்தரும். சடாசுரன் வதை - தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபு,செயப்படுபொருளில் வந்தது. இவன் திரௌபதியை யெடுத்துக் கொண்டுபோனதுபற்றி, இவனைவீமன் கொன்றான். இவனைமேல் அரக்கனெனக் கூறியிருப்பினும் இங்கே அசுரனென்றது, இரண்டு சாதியாரும் கொடுந்தொழில் செய்யும் இனத்தவராதலின் என்க. 1.-கடவுள்வாழ்த்து. அழுதும்வாண்முறுவ லரும்பியுங் களித்து மாடியும்பாடியு மகிழ்ந்தும், தொழுதுமா தரித்தும் விழுந்துமே லெழுந்துந் துதித்திடத் தன் பதந்தருவான், முழுதுமா யெங்கு முச்சுட ராகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய், எழுதொணாமறைக்கு மெட்டொணாவடிவத்தெம்பிரானும்பர்நா யகனே. |
|