றந்த மலைகளைச்சேர்ந்த வழிகளை,சிங்கம் என - சிங்கங்கள்போல, சென்றார்- கடந்துபோனார்கள்;(எ-று.) குருநாட்டின்எல்லைகங்கைவரையி லென்க. நாட்டை யிழந்து காட்டில் வசிக்கும் பாண்டவரைக் கங்கைவளநாடரென்றது, அரசாண்ட பாண்டுமகாராசனது குமாரரும் துரியோதனாதியரினும்பிராயத்தில் மூத்தவருமாகிய இவர்களே முறைப்படி அந்நாட்டிற்கு உரியவராதலின். இப்பொழுது இவர்களுக்கு நாட்டரசாட்சி இல்லையாயினும்,முன்னும் பின்னும் நாட்டையாளுதல் பற்றி நாடரெனக்கூறிய தென்க. தங்கினார்கள், கள்-விகுதிமேல் விகுதி;அசையெனினுமாம். (500) 25.-அஷ்டகோணமகரிஷியின்வனத்தையடைந்து அம்முனிவனைத்தொழ,அவனாற்பாண்டவர் உபசரிக்கப்படுதல். ஏணில்வரைமார்பரிமை யோர்புகழுமெட்டுக் கோணுடையமாமுனிவ னங்குறுகியன்னான் மாணுடைமலர்ப்பதம் வணங்கினர்துதித்தார் தாணுவனையானுமவர்தம்மையெதிர்கொண்டான். |
(இ-ள்.) ஏண்இல் வரை மார்பர்-வலிமைக்கு இருப்பிடமான மலைபோலும்மார்பையுடைய பாண்டவர்கள்,-இமையோர்புகழும் எட்டு கோண் உடைய மா முனி வனம் குறுகி-தேவர்கள் புகழுந் தன்மையாகிய (உடம்பில்) எட்டுக்கோணலையுடைய அஷ்டாவக்கிர மகாமுனிவ ரெழுந்தருளியிருக்குங் காட்டை அடைந்து, அன்னான்மாண் உடை மலர் பதம் வணங்கினர் - அம்முனிவரது மகிமையையுடைய தாமரைமலர்போலுந் திருவடிகளைநமஸ்கரித்து, துதித்தார் - தோத்திரஞ் செய்தார்கள்;தாணு அனையான்உம்-(பெருந்தவமுடைமையிலும் பேராற்றலிலும்) சிவபிரானையொத்தஅம்முனிவரும், அவர் தம்மை எதிர்கொண்டான்- அப்பாண்டவர்களைஎதிர்கொண்டு உபசரித்தருளினார்;(எ-று.) ஏணில்என்பதில், இல்-சாரியையெனக்கொண்டு, வலிமையையுடைய வரை மார்பு என்றுமாம். "வரையகன்மார்பிடை வரையு மூன்றுள"எனச் சிந்தாமணியிலும், "ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பு"எனத் திருமுருகாற்றுப் படையிலும் கூறியுள்ளவற்றிற்கேற்ப, வரை மார்பு - (உத்தமவிலக்கணமாகிய மூன்று) ரேகைகளையுடையமார்பு என்றலுமாம். கோண்-கோணுதல்: முதனிலைத்தொழிற்பெயர்; கோணமென்னும் வடசொல்லின் விகாரமென்றுங் கொள்ளலாம். ஒவ்வொரு பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக்கோணல் நிமிருமாறு நீண்ட ஆயுளையுடையஅந்த அஷ்டகோணமகாமுனிவர், திருமாலின் அமிச மெனப்படுவர். இப்படிப்பட்ட பெருந்தகைமையுடைய முனிவரும் இவர்களைஎதிர்கொண்டு உபசரித்தது, தமது இயற்கையாகவுள்ள நல்லருளாலென்க. மாண் - மாட்சி; பண்படி. தாணு - |