பக்கம் எண் :

326பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) அபுனலில்-அந்த நீர்வெள்ளத்தில், ஆர்தரு மணம் கமழ -
நிறைந்த வாசனைவீசும்படி, அம் தண் மெய் பதுமம் நாள் மலர்-அழகிய
குளிர்ந்த வடிவத்தையுடைய புதிதாய்மலர்ந்த தாமரை மலரொன்று, மீதுஏ
மிதந்து வர - மேலே மிதந்துகொண்டுவர, மைபதுமம் வாள் விழி மடந்தை-
அஞ்சனமணிந்த தாமரைமலர்போன்ற ஒளியையுடைய கண்களையுடைய
திரௌபதி, அது காணா-அதனைக்கண்டு, (அம்மலரை), கை நாள் பதுமம்
மலர் உற - (தனது) கையாகிய அன்றுமலர்ந்த தாமரைமலரிலே
பொருந்தும்படி, கடிது எடுத்தாள் - விரைவாக எடுத்தாள்;(எ-று.)

     பதுமம் -பத்மம்; வடசொல்.  மைப்பதுமம்  என எடுத்து,
நீலோற்பல மலரென்றுங் கொள்ளலாம்.  வாள்விழி - வாட்படைபோலுங்
கூரிய கொடிய கண்களுமாம்.                                (504)

3.-எடுத்தமலரைத்திரௌபதி வீமனது கையிற்கொடுத்து
இது எங்கு உளதென்றுவினாவல்.

எடுத்தமலர்கைக்கொடொ ரிமைப்பின்மயிலன்னாள்
அடுத்துவயமாருதியை யம்மலரவன்கைக்
கொடுத்திம்மலரெங்குளது கூறுகெனவமரில்
தொடுத்தவயவாகைபுனைதோன்றலிவைசொல்வான்.

     (இ-ள்.)எடுத்த மலர்-(அவ்வெள்ளத்தினின்று தான்)எடுத்த பூவை, கை
கொடு - கையிலே யேந்திக்கொண்டு, மயில் அன்னாள்- (சாயலில்)
மயிலையொத்ததிரௌபதி, ஒர் இமைப்பின்-ஒருநிமிஷத்திலே, வய
மாருதியை அடுத்து-வலிமையையுடைய வீமனைச்சேர்ந்து, அ மலர் அவன்
கை கொடுத்து - அந்தப்பூவை அவனது கையிலே கொடுத்து, இ மலர்
எங்கு உளது கூறுக என-இவ்வகைப் பூ எவ்விடத்திலுள்ளது
சொல்வாயென்று வினாவ,-அமரில்தொடுத்த வய வாகை புனைதோன்றல்
- போரிலே தொடுக்கப்பட்ட வெற்றிக்கடையாளமான
காட்டுவாகைப்பூமாலையைஅணிகிற வீமராசன், இவை சொல்வான் -
இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவற்றை
மேலிரண்டுகவிகளிற் காண்க.

     அமரில் வாகைபுனையென இயையும்.  இங்கே வயவாகை, கீழிரண்டு
சருக்கங்களிலும் கூறப்பட்ட வெற்றிகளைப்பற்றியது.  மயிலை,பெண்களின்
நடைக்கும் உவமையாகச் கொள்வாருமுளர்.  தோன்றல் - மற்றையோரினுஞ்
சிறந்து விளங்குபவன்: அல்-கருத்தாப்பொருள் விகுதி.              (505)

4.-இதுவும்,மேற்கவியும் - ஒருதொடர்: வீமன்
இவ்வகைப் பூவை எங்குஇருப்பினும்
கொணர்ந்துகொடுப்பேனெனல்.

முன்புமுன்மலர்க்குழ றனக்கிமலர்முன்பால்
அன்புடனியக்கர்பதி நின்றுமருள்செய்தேன்