இன்புறவிமைப்பொழுதி னின்றுமிதளிப்பேன் துன்புறறழற்கடவு டந்ததொருதோகாய். |
(இ-ள்.)'தழல்கடவுள் தந்தது ஒரு தோகாய் - அக்கினிபகவான் பெற்ற ஒரு மயில்போன்றவளே! முன்புஉம்-முன்னமும், மலர் உன் குழல் தனக்கு - பூக்களைச்சூடுந்தன்மையுள்ளஉனது கூந்தலுக்கு, இ மலர் - இது போன்ற பூவை, முன்பால் - வலிமையினால்,அன்புடன் - அன்புடனே, இயக்கர்பதி நின்றும் - யக்ஷர்களது நகரமான அளகாபுரியினின்றும், அருள் செய்தேன் - கருணைசெய்துகொணர்ந்துகொடுத்தேன்;இன்றுஉம்- இப்பொழுதும், இன்பு உற-(நீ) இன்பமடையும்படி, இமை பொழுதின் - நொடிப்பொழுதினுள்ளே, இது - இவ்வகைத்தாமரைமலரையும், அளிப்பேன் - கொணர்ந்து கொடுப்பேன்;துன்பு உறல் - துன்பமடையாதே;' முன்பும்,இன்றும் என்றவற்றிலுள்ள உம்மைகள் - முறையே எதிரதும் இறந்ததுந் தழுவிய எச்சப்பொருளன. துன்புறல்-எதிர்மறையொருமையேவல்; வியங்கோளென்றுங் கொள்ளலாம்.தோகாயென்பது - இங்குப் பொருளால் உயர்திணையாயினும், சொல்லால்அஃறிணையாதலின்,தந்தது என்ற அஃறிணையொருமைச்சொல்லால்விசேடிக்கப்பட்டது. (506) 5. | இந்தமலரிந்திர புரத்தெனினுமின்றுன் அந்தமில்கருங்குழ றனக்கருள்கிலேனேல் முந்தரவுயர்த்தவன் முதற்பகைமுடிக்கும் மைந்துடையதன்றெனது வாகுகிரியென்றான். |
(இ-ள்.)'இந்தமலர் - இவ்வகைப்பூவை, இந்திர புரத்து எனின்உம்- தேவேந்திரனது அமராவதிநகரத்தில் உள்ளதாயினும், இன்று - இப்பொழுதே (சென்று), உன் அந்தம் இல் கரு குழல் தனக்கு - உனது அழிதலில்லாத கரிய கூந்தலுக்கு, அருள்கிலேன் ஏல்-(யான்)கொடுக்கமாட்டாமற் போவேனாயின்,எனது வாகு கிரி-எனது தோள்களாகிய மலைகள்,முந்து அரவு உயர்த்தவன் முதல் பகை முடிக்கும் மைந்து உடையது அன்று - சிறந்த பாம்புக் கொடியை உயரஎடுத்தவனான துரியோதனன் முதலான பகைவர்களைஅழிக்கும் வலிமையுடையனவல்ல,' என்றான்- என்று சபதஞ் செய்தான், (வீமசேனன்); (எ-று.) அருள்கிலேன்,கில்-ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வாகுகிரி- சாதியொருமை. அன்று-எதிர்மறை ஒருமைக் குறிப்புமுற்று. (507) 6.-வீமன்உடன்பிந்தவர்க்குத்தெரியாது மலர்கொணரப் புறப்படுதல். என்றினைவாசகமுரைத்திகலினென்றும் வென்றிதருதண்டுசிலைகொண்டுவிறலோடும் தன்றுணைவரொன்றுமுணராதபடிதானே சென்றனனிடிம்பனையடுந்திறலின்மிக்கான். |
|